இலங்கைத் தீவு முழுதும் முடக்கப்படுமா? இராணுவத் தளபதி கொடுத்த விளக்கம் - செய்திகளின் தொகுப்பு
நாட்டை முழுமையாக முடக்கும் அவசியமில்லை என்பதை மீண்டும் வலியுறுத்தியுள்ள இராணுவத் தளபதி, கோவிட் வைரஸ் பரவலை தடுக்கும் நடவடிக்கைகளுக்கு மக்களது பூரண ஒத்துழைப்பு அவசியம் என்றும் தெரிவித்துள்ளார்.
கோவிட் வைரஸ் பரவும் பிரதேசங்களில் தேவைக்கேற்ப தனிமைப்படுத்தலுக்கான முடக்கம் மேற்கொள்ளப்படும் என்றும், அதேவேளை சுகாதார வழிமுறைகளை மீறி செயற்படுவோருக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கோவிட் வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகளில் சுகாதாரத் துறையினர் பாதுகாப்புத் துறை உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாக தெரிவித்த அவர், கடுமையான உழைப்பின் மூலம் விரைவில் கோவிட் வைரஸ் பாதிப்பிலிருந்து மீட்சி பெற முடியும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான காலை நேர முக்கிய செய்திகளின் தொகுப்பு,