நெருக்கடியான நேரத்திலும் மக்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர்! செய்திகளின் தொகுப்பு
2022ஆம் ஆண்டிலும் குடிநீர் கட்டணத்தை அதிகரிக்க மாட்டோமென நீர்வழங்கல் இராஜாங்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார (Vasudeva Nanayakkara) தெரிவித்துள்ளார்.
2019 இல் நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் நஷ்டம் 1,126 மில்லியன்களாக இருந்த போதும் 2020 இல் வரிக்குப் பின்னரான இலாபம் 520 மில்லியன்களென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற நீர்வழங்கல் அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றியபோதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான காலை நேர முக்கிய செய்திகளின் தொகுப்பு,