மக்கள் விரும்பாத பல தீர்மானங்கள் எடுக்கப்படும்! ஜனாதிபதி பகிரங்க அறிவிப்பு - செய்திகளின் தொகுப்பு
பூகோள பொருளாதார சவால்களை வெற்றி கொண்டு நாட்டை சுபீட்சத்தை நோக்கி கொண்டு செல்வதற்கு எதிர்காலத்தில் மக்கள் விரும்பாத பல தீர்மானங்களை எடுக்க வேண்டியிருக்கும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ (Gotabaya Rajapaksha) தெரிவித்துள்ளார்.
விமர்சனங்கள் இருந்த போதிலும், எதிர்வரும் காலங்களில் நாடும் மக்களும் இதன் பலனை அனுபவிப்பார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே அனைவரும் நாட்டைப் பற்றி சிந்தித்து புரிந்துணர்வுடன் செயற்பட வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான காலை நேர முக்கிய செய்திகளின் தொகுப்பு,