8000 ஏக்கருக்கு மேற்பட்ட ர் வயல் நிலங்கள் சேதம்! விவசாயிகள் கூட்டாக விடுத்துள்ள கோரிக்கை
கந்தளாய் குளத்தின் பத்து வான்கதவுகள் திறக்கப்பட்டதால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால், அப்பகுதியிலுள்ள 8000 மேற்பட்ட ஏக்கர் வயல் நிலங்கள் முற்றாக சேதமடைந்துள்ளன.
பரட்டைக்காடு, செட்டிக்காடு, தம்பலகாமம் உள்ளிட்ட பகுதிகளில் பத்து நாட்களான நெற்பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கி அழிந்துவிட்டன.
விவசாய நடவடிக்கைகளை பாதிக்கும் அச்சுறுத்தல்
வெள்ளம் வடிந்த பின் வயல் நிலங்கள் முழுவதும் மணலும், சேறும் படிந்துள்ளதால், விவசாயிகள் தாம் பெரும் நட்டத்தை எதிர்கொண்டுள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர்.

இந்த சேதம் அடுத்த போக விவசாய நடவடிக்கைகளையும் பாதிக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு மற்றும் நிவாரணங்களை வழங்குவதுடன், வயல் நிலங்களை சீரமைக்க நீர்ப்பாசனத்திணைக்களம், விவசாய அமைச்சகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் ஆகியன விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளனர்.
பச்ச குழந்தை விஜய்க்கு என்ன தெரியும்? 40 வயது த்ரிஷா தான் தவறு... தாறுமாறாக கலாய்த்த மருத்துவர்! Manithan
சிறகடிக்க ஆசை சீரியல்: சிந்தாமணியின் மகளிடம் காதலை சொல்லப்போகும் சத்யா.. துணை நிற்கும் முத்து! Cineulagam