கிழக்கு மாகாணத்தில் 10,842இற்கும் மேற்பட்ட கோவிட் தொற்றாளார்கள் அடையாளம்
கோவிட் 3ஆவது அலையின் பின்னராக இது வரை கிழக்கு மாகாணத்தில் 10,842 இற்கும் மேற்பட்ட தொற்றாளார்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஏ.ஆர்.எம்.தௌபீக் தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிமனையில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த 24 மணித்தியாலங்களில் மட்டக்களப்பில் 166 பேரும், திருகோணமலை மாவட்டத்தில் 52 பேரும், அம்பாறை சுகாதார அதிகாரி பிரிவில் 3 பேரும், கல்முனையில் 17 பேரும் அடங்கலாக 238 கோவிட் நோய் தொற்றாளர்கள் அடையாளங்காணப்படுள்ளனர்.
கடந்த 7 நாட்களில் 1228 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். ஆகவே இந்த வாரம் நோயாளர்களது அதிகரிப்பை அவதானிக்கக் கூடியதாக இருப்பதால் பொது மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும்
கிழக்கில் இதுவரை 200 மரணங்கள் பதிவாகியுள்ளதுடன், 46 மரணங்களும்
இவ்வாரத்தில் பதிவாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri
