இலங்கை மட்டுமன்றி உலகின் ஏனைய நாடுகளிலும் பணம் கூடுதலாக அச்சிடப்பட்டுள்ளது
இலங்கை மட்டுமன்றி அமெரிக்கா உள்ளிட்ட உலகின் ஏனைய நாடுகளிலும் கூடுதலாகப் பணம் அச்சிடப்பட்டுள்ளது என மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
இலங்கை வரலாற்றில் இந்தளவு தொகை பணம் அச்சிடப்படவில்லை என்பதனை ஒப்புக்கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளின் மத்திய வங்கிகளும் இவ்வாறு கூடுதல் தொகையில் பணம் அச்சிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் காலப்பகுதியில் நிலவி வரும் அழுத்தங்களை மக்கள் மீது சுமத்தாதிருக்கும் நோக்கில் இவ்வாறு கூடுதல் அளவில் பணம் அச்சிடப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
நோயாளி ஒருவரைக் காப்பாற்றுவதற்காகச் சத்திர சிகிச்சை செய்வது போன்றே இந்த பணம் அச்சிடல் நடவடிக்கையையும் கருத வேண்டுமெனத் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு பணம் அச்சிடுவதில் சில ஆபத்துக்கள் இருப்பதனை மறுப்பதற்கில்லை என்ற போதிலும் மக்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புக்களை வரையறுக்கவே இவ்வாறு பணம் அச்சிடப்படுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri
