இலங்கையில் எதிர்வரும் வாரங்களில் அதிகரிக்கவுள்ள கோவிட் இறப்புகள்
கோவிட் தொடர்பான இறப்புகள் தற்போதைய விகிதத்தில், எதிர்வரும் வாரங்களிலும் 180 என்ற எண்ணிக்கையில் தொடரும்.
எனினும் தொற்றுக்களின் எண்ணிக்கை குறையக்கூடும் என்று சுகாதார சேவைகளின் துணை பணிப்பாளர், வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கு முன்னர் வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளே தற்போது இறப்பதாக அவர் கூறியுள்ளார்.
அதன்படி, எதிர்வரும் வாரங்களில் அதிக இறப்புகள் ஏற்படலாம். மாறாக, தொற்றுநோய்களின் எண்ணிக்கையில் சிறிது குறைவு ஏற்படலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், கோவிட் சிகிச்சை பணியில் ஈடுபட்டுள்ள மூன்று மருத்துவர்கள், ஒரு செவிலியர் மற்றும் மூன்று மருத்துவமனை ஊழியர்கள் இதுவரை வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அய்யனார் துணை சீரியல் படப்பிடிப்பு தளத்தில் நடிகை மதுமிதாவிற்கு ஏற்பட்ட சோகம்... வெளிவந்த வீடியோ Cineulagam
நிலா வீட்டைவிட்டு சென்றதால் சோழன் எடுத்த அதிரடி முடிவு, ஷாக்கில் குடும்பத்தினர்... அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam