மஹிந்தானந்தவிற்கு எதிராக மேலும் ஒரு வழக்கு
முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்தவிற்கு எதிராக மேலும் ஒரு வழக்குத் தொடரப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கரம் போர்ட் சம்பவம் தொடர்பிலேயே இந்த வழக்கும் தொடரப்பட உள்ளதாக சட்டத்துறைசார் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கரம் போர்ட் சம்பவம் தொடர்பில், ஊழல் மோசடி குற்றச்சாட்டின் அடிப்படையில் முன்னதாக வழக்குத் தொடரப்பட்டு அதற்கு தண்டனை விதிக்கப்பட்டது.
இந்த கரம் போர்ட் விநியோகம் குறித்த கொடுக்கல் வாங்கல்களில் சூழ்ச்சி செய்ததாக மஹிந்தானந்த மீது குற்றவியல் வழக்குத் தொடரப்பட உள்ளது.
குற்றவியல் சட்டத்தின் பிரகாரம் இந்த வழக்கு தொடரப்பட உள்ளதாக சட்ட மா அதிபர் திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மஹிந்தானந்த அலுத்கமகே மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் அப்போதைய செயலாளர் மேஜர் ஜெனரல் நந்த மல்லவராச்சி ஆகியோர் இந்த மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட உள்ளனர்.
கரம் போர்ட் விவகாரத்தில், மஹிந்தனாந்த அலுத்கமகேவிற்கு ஏற்கனவே 20 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிராக போருக்கு தயாராகும் நாடு - 800 ஏவுகணை தயாரிக்க சீனாவுடன் ஒப்பந்தம் News Lankasri
