கைது செய்யப்பட்டவர்களுக்கு நீதி கோரி மாதகலில் கவனயீர்ப்பு நடவடிக்கை முன்னெடுப்பு
கஞ்சா கடத்திய சந்தேகத்தில் மாதகல் பகுதியைச் சேர்ந்த இருவரைக் கடற்படையினர் நேற்று கைது செய்துள்ள நிலையில் கைது செய்யப்பட்டவர்களது உறவினர்கள் மாதகல் பகுதியில் இன்று கவனயீர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
கவனயீர்ப்பில் ஈடுபட்டவர்கள் கருத்து தெரிவிக்கையில்,
குறித்த இருவரும் நேற்றையதினம் கடலுக்குச் சென்று திரும்பி வரும் வேளையில் கடற்படையினர் அவர்களை வழிமறித்தனர்.
இதன்போது கடற்படையினரின் கட்டளைக்குக் கட்டுப்பட்டவர்கள் அவ்விடத்தில் நின்றனர். இந்நிலையில் கடலில் மிதந்து வந்த, சுமார் 276 கிலோ கஞ்சாவை அவர்கள் கடத்தியதாகத் தெரிவித்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் பயணித்த படகு சிறியது. அந்தப்படகில் தொழில் முதல்கள் இருந்தன. இந்நிலையில் 276 கிலோ கஞ்சா எவ்வாறு அந்த படகில் கொண்டு வருவது? அத்துடன் அவர்கள் பயணித்த படகின் ஜி.பி.எஞ்சினை பார்த்தால் அவர்கள் எங்கு சென்றுள்ளார்கள் கஞ்சா கடத்தும் இடத்துக்குச் சென்று உள்ளார்களா எனத் தெரியவரும்.
கைது செய்யப்பட்டவர்களைக் கடற்படையினர், "நீங்கள் காணி சுவீகரிப்பு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் தானே" என ஈவிரக்கமற்ற முறையில் தாக்கியுள்ளனர். நாங்கள் அவர்களைப் பார்க்கச் சென்ற வேளை அவர்கள் எமக்கு இந்த விடயத்தைக் கூறியுள்ளார்கள்.
நேற்று இரவு அவர்கள் இளவாலைப் பொலிஸாரிடம் கையளிக்கப்பட்டுள்ளார்கள். எனவே கைது செய்யப்பட்டவர்களைச் சரியாக விசாரணை செய்து உண்மைத் தகவலை வெளிப்படுத்த வேண்டும் என அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் குறித்த இடத்தில் அங்கு செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் மற்றும் மக்களை அங்கிருந்த ஒருவர் காணொளி எடுத்துள்ளார்.
இதன்போது அங்கிருந்த மக்கள் அவரை நேக்கி "நீங்கள் யார் எதற்கு தங்களை காணொளி எடுக்கிறீர்கள்?" என கேள்வி எழுப்பினர்.
இதன்போது குறித்த நபர் தான் ஒரு ஊடகவியலாளர் எனக் கூறியுள்ளார்.
அங்கிருந்தவர்கள் ஊடகவியலாளர் என்றால் ஊடகவியலாளரின் அடையாள அட்டையை காண்பிக்குமாறு கூறியுள்ளனர் இருந்தும் அவர் அடையாள அட்டையை காண்பிக்காமல் அங்கிருந்து சென்றுள்ளார் என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.




இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

ஆயுதமௌனிப்பிற்குப் பின்னரான பதின்மூன்றாண்டுகள் 9 மணி நேரம் முன்

வெளியிடத்தில் 11 வயது மகளை இப்படியா நடத்துவீங்க? ஐஸ்வர்யா ராயை திட்டித் தீர்க்கும் ரசிகர்கள் Manithan

இங்கு பாலியல் அடிமைகளாக கேரள செவிலியர்கள்! வெளிநாட்டில் பணிபுரியும் இந்தியர் பேசிய வார்த்தையால் அவருக்கு நேர்ந்த கதி News Lankasri

அழியும் உக்ரைன்... ரஷ்ய கோடீஸ்வரர்களின் சொத்துக்களை மீட்டு செலவிட வேண்டும்: எழுந்த கோரிக்கை News Lankasri

வரப்போகும் சுக்கிர பெயர்ச்சி! அடுத்த 27 நாட்கள் இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட நிறைந்ததாக இருக்குமாம் News Lankasri

பந்துவீச வேகமாக ஓடிவந்த பாண்டியாவை கையை காட்டி நிறுத்திய கோலி! கோபத்தில் பந்தை தூக்கி வீசிய வீடியோ News Lankasri

7 நாளில் சிவகார்த்திகேயனின் டான் படம் தமிழகத்தில் செய்த வசூல்- நாளுக்கு நாள் செம கலெக்ஷன் Cineulagam
மரண அறிவித்தல்
திருமதி சுந்தரேஸ்வரி இரத்தினகோபால்
கொக்குவில், கொழும்பு, Duisburg, Germany, Leverkusen, Germany
13 May, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் அருணாசலம் முத்துலிங்கம்
காரைநகர் மாப்பாணவூரி, இராசாவின் தோட்டம், Aubervilliers, France
20 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் சின்னத்தம்பி அழகு
வல்வெட்டித்துறை இலந்தைக்காடு, Montreal, Canada, Cornwall, Canada, நல்லூர்
31 May, 2021
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் செல்லம்மா இராசையா
புங்குடுதீவு 10ம் வட்டாரம், பிரான்ஸ், France, டோட்மண்ட், Germany
20 May, 2019
மரண அறிவித்தல்
திருமதி கமலாதேவி கோபாலகிருஷ்ணன்
பருத்தித்துறை, London, United Kingdom, Nigeria, Toronto, Canada
14 May, 2022