கனடாவின் கியூபெக் மாகாணத்தில் இரண்டு நாட்களில் 20 பேருக்கு குரங்கம்மை தொற்று உறுதி
கனடாவின் கியூபெக் மாகாணத்தில் இரண்டு நாட்களில் 20 பேருக்கு குரங்கம்மை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்த விடயத்தை சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளதுடன், இதனையடுத்து மாகாணம் முழுவதும் குரங்கம்மை தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 71ஆக அதிகரித்துள்ளதென குறிப்பிடப்பட்டுள்ளது.
பாதிப்பு எண்ணிக்கை அதிகரிப்பு
கடந்த புதன்கிழமை 52 என உறுதி செய்யப்பட்ட பாதிப்பு எண்ணிக்கை தற்போது மிக வேகமாக 71 என அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது.
வெள்ளிக்கிழமை நிலவரப்படி, ஒன்ராறியோவில் ஐந்து பேர்களுக்கும் ஆல்பர்ட்டாவில் ஒருவருக்கும் குரங்கம்மை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உலக நாடுகளில் குரங்கம்மை தொற்று
இதனிடையே உலக நாடுகளில் இதுவரை 700 பேர்களுக்கு குரங்கம்மை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 12 மணி நேரம் முன்

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri

சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam
