பௌத்த பிக்கு ஒருவர் கைது
பெண் ஒருவருடன் ஹோட்டல் அறையில் தங்கியிருந்த பௌத்த பிக்கு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தியதலாவ பிரதேசத்தில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றில் வைத்தே குறித்த பௌத்த பிக்கு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகத்தின் பேரில் குறித்த பௌத்த பிக்குவை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸார் விசாரணை
இந்த பௌத்த பிக்கு பொரளந்த பகுதியில் அமைந்துள்ள விஹாரையொன்றைச் சேர்ந்தவர் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
46 வயதான பௌத்த பிக்கு, 40 வயதான பெண் ஒருவருடன் ஹோட்டல் அறையில் தங்கியிருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண் திருமணமானவர் எனவும், அவருடன் பௌத்த பிக்கு ஹோட்டல் அறையில் தங்கியிருப்பதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பின்னணியை கண்டறிய அநுரவுக்கு முக்கிய வாய்ப்பு 16 மணி நேரம் முன்

மனைவியுடன் சேர்ந்து இந்தத் திட்டத்தில் முதலீடு செய்தால் ஒவ்வொரு வருடமும் ரூ.1,11,000 பெறலாம்.., Post Office திட்டம் தெரியுமா? News Lankasri
