வர்த்தகர் ஒருவரிடம் இருந்து 45 லட்சம் ரூபாய் கொள்ளை
மீகோட பொருளாதார மத்திய நிலையத்தின் வர்த்தக நிலையம் ஒன்றின் உரிமையாளர் மீது மிளகாய் பொடி தாக்குதல் நடத்தி பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக மீகொட பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பொலிஸார் விசாரணை
இன்று அதிகாலை தனது வர்த்தக நிலையத்தை மூடிவிட்டு முச்சக்கர வண்டியில் பணியாளர் ஒருவரையும் ஏற்றிக்கொண்டு சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
பணியாளரை அவரது வீட்டில் இறக்கிவிட்டு தனது வீடு நோக்கி பயணித்த போது மீகொட சிறிரத்தன மாவட்டத்தில் வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
முச்சக்கர வண்டியில் இருந்த நபர் ஒருவரே மிளகாய் தூள் தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.