யாழில் பலரை இலக்கு வைத்து பண மோசடி - விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
யாழ்ப்பாணத்தில் பிரபல வர்த்தகர்களை இலக்கு வைத்து பாரிய பண மோசடி இடம்பெறுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
இலங்கை தொலைத்தொடர்பு திணைக்களம் மற்றும் அரச வங்கிகளின் பெயர்களைப் பயன்படுத்தி பண மோசடிகள் இடம்பெறுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
யாழ் மாவட்டத்தின் சில பகுதியிலுள்ள வர்த்தகர்களுக்கு தொலைபேசி அழைப்புகள் ஊடாக இவ்வாறான செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளன.
பண மோசடி
இலங்கை தொலைத்தொடர்பு நிறுவகத்தில் இருந்து அழைப்பை ஏற்படுத்துவதாக தம்மை அடையாளப்படுத்தும் மோசடியாளர்கள், நீங்கள் உங்களது தொலைபேசி கட்டணங்களை சிறந்த முறையில் செலுத்துவதன் காரணத்தால் உங்களுக்கு பரிசு வழங்கப்படவுள்ளது.
அதற்காக உங்கள் அடையாள அட்டை இல, வங்கிக் கணக்கு இலக்கம் என்பனவற்றினை தருமாறும் கோருகின்றனர்.
இத்தரவுகள் வர்த்தகர்களினால் வழங்கப்பட்ட சிறிது நேரத்தில் ஓர் OTP இலக்கம் வங்கியின் பெயரிலேயே அனுப்பப்படுவதாகும் சிலருக்கு வங்கிக்கு பணம் அனுப்பியது போன்று வங்கியின் பிரத்தியேக செயலிக்கே தரவுகள் அனுப்பப்படுவதாகவும் வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
மர்மநபர்கள்
இதன்பின் மீள் அழைப்பெடுக்கும் மர்மநபர்கள் அவ் குறித்த இலக்கங்களினை கோருவதாக சுட்டிக்காட்டிய வர்த்தகர்கள் தாம் சந்தேகமடைந்து அந்த இலக்கத்தை மீளத் தொடர்பு கொள்ள முடியவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறான மோசடியால் பாதிக்கப்பட்டவர்களை அருகிலுள்ள பொலிஸ் நிலையங்களில் அறிவிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான், சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல் - இந்தியா சொந்தமாக உருவாக்கும் பாதுகாப்பு அமைப்பு News Lankasri

ஆயுத ஏற்றுமதியில் சாதனை படைத்த நாடு - ஜேர்மனி, இந்தியா உட்பட பல நாடுகள் முக்கிய வாடிக்கையாளர்கள் News Lankasri

பாகிஸ்தானுக்கு புதிய அச்சுறுத்தல்... மிக ஆபத்தான R-37M ஏவுகணைகளை சொந்தமாக்கும் இந்தியா News Lankasri
