கனடாவிற்கு அனுப்புவதாக மட்டக்களப்பில் பெருந்தொகை பணமோசடி
கனடாவிற்கு அனுப்புவதாக கூறி பணமோசடியில் ஈடுப்பட்ட ஒருவர் மட்டக்களப்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.
காத்தான்குடியை சேர்ந்த முன்னாள் பிரதேச சபை உறுப்பினரான 57 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
பொலிஸ் விசாரணை
கடந்த சில மாதங்களிற்கு முன்னர் பளை பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் சமூக வலைத்தளம் ஊடாக வந்த விளம்பரம் ஒன்றில் அறிமுகமாகி கனடாவிற்கு செல்வதற்காக பத்து இலட்சம் ரூபாவினை குறித்த நபருக்கு வைப்பிலிட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து கனடாவிற்கு அனுப்புவதாக குறித்த நபர் நீண்ட நாட்களாக ஏமாற்றி வந்த நிலையில், அவர் கொடிகாமம் பொலிஸ் ஊடாக யாழ்.மாவட்ட விசேட குற்ற விசாரணைப்பிரிவில் முறைப்பாடு செய்துள்ளார்.

இந்நிலையில் விசாரணைகளை மேற்கொண்ட யாழ்.மாவட்ட விசேட குற்றவிசாரணைப்பிரிவு பொறுப்பதிகாரி குணறோயன் தலைமையிலான குழுவினர் காத்தான் குடியைச் சேர்ந்த சந்தேகநபரை கைது செய்து யாழ்ப்பாணம் மேலதிக நீதவானிடம் முற்படுத்தியுள்ளனர்.
இதன்போது சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
Bigg Boss: ரெட் கார்டு பெற்றும் வெளியேற மறுத்த போட்டியாளர்... மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட தருணம் Manithan
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
அந்த நாட்டு அகதிகள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுவார்கள்... ஜேர்மன் சேன்சலர் திட்டவட்டம் News Lankasri
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
பிரித்தானியாவின் மிகப்பெரிய பணக்காரர் காலமானார்: வணிக சாம்ராஜ்யத்தை உருவாக்கிய இந்தியர் News Lankasri