பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவில் வைக்கப்பட்டிருந்த பணம் காணாமல்போயுள்ளதாக தகவல்
காணாமல்போயுள்ள பணம்
பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவில் வைக்கப்பட்டிருந்த சுமார் 26 இலட்சம் ரூபா பணம் காணாமல்போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வழக்குப் பொருட்களில் ஒன்றாக இந்த பணத்தொகை வைக்கப்பட்டிருந்ததாக தெரியவருகிறது.
இரண்டு வாரங்களுக்கு முன்னர் இந்தப் பணம் காணாமல்போயுள்ளதாக கூறப்படுகிறது.
பொறுப்பாக இருந்த அதிகாரிகள்
எனினும், இந்த பணத்திற்கு பொறுப்பாக இருந்த எந்தவொரு அதிகாரிக்கு எதிராகவும் குற்றம் சுமத்தப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
மாறாக இந்தப் பணத்தை வேறு ஓர் சுற்றிவளைப்பின் போது மீட்கப்படும் பணத்தைக் கொண்டு ஈடு செய்து கொள்ள அதிகாரிகள் திட்டமிட்டிருந்ததாக பொலிஸ் உள்ளக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.