முல்லைத்தீவு தாக்குதலுக்கு சுவிஸில் இருந்து பணம்! - ஆறு பேர் கைது
முல்லைத்தீவு - செல்வபுரத்தில் வீடொன்றுக்குள் புகுந்து வாள்வெட்டு தாக்குதலை நடத்தியதுடன், கார் ஒன்றினை எரியூட்டிய சம்பவம் தொடர்பில் 6 பேர் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சுவிஸில் இருந்து ஆவா குழுவைச் சேர்ந்த ஒருவர் பணம் அனுப்பி இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர் என்று சந்தேக நபர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.
நவாலியைச் சேர்ந்த மூவரும் புத்தூரைச் சேர்ந்த மூவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் ஆறுபேரும் முல்லைத்தீவு மாவட்ட பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்பு பொலிஸாரிடம் முற்படுத்தப்படவுள்ளார்கள்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
தொடர்புடைய செய்தி....
முல்லைத்தீவில் வாள் வெட்டு, வாகனத்திற்கு தீ வைத்த சம்பங்கள் தொடர்பில் மூவர் கைது






தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 6 நாட்கள் முன்

இந்த புகைப்படத்தில் விஜய்யுடன் இருக்கும் பிரபல நடிகர் யார் என்று உங்களுக்கு தெரியுமா? இதோ பாருங்க Cineulagam

நாளை முதல்... ஐரோப்பிய ஒன்றியத்துக்கு பயணிக்கும் பிரித்தானியர்களுக்கு ஒரு முக்கிய செய்தி News Lankasri
