கொரோனா எதிர்ப்பு மாத்திரையான ”மொல்னுபிராவிரை” இறக்குமதி செய்ய ஜனாதிபதியின் பணிப்புரை
கொவிட்-19 வைரஸ் எதிர்ப்பு மருந்தான (மாத்திரை) மொல்னுபிராவிரை( Molnupiravir) அரச மருந்துக் கூட்டுத்தாபனத்தின் மூலம் இறக்குமதி செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமனவுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக மொல்னுபிராவிர் ( Molnupiravir) மாத்திரையை வழங்குவது குறித்து இன்று நடைபெற்ற கோவிட்-19 கட்டுப்பாட்டுக்கான சிறப்புக் குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இதன்போதே ஜனாதிபதியினால் இந்த பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
Molnupiravir மாத்திரை, அமெரிக்க மருந்து நிறுவனங்களான Merck, Sharp and Dohme (MSD) மற்றும் Ridgeback Biotherapeutics ஆகியவற்றால் உருவாக்கப்பட்டது. உலகில் கோவிட்-19க்கான முதல் வைரஸ் எதிர்ப்பு மருந்தாக இதுவாக கருதப்படுகிறது.
இது ஊசி மூலம் அல்லது நரம்பு வழியாக கொடுக்கப்படுவதை விட மாத்திரையாக எடுத்துக்கொள்ளப்படுகிறது.