கடலில் ஆபத்தில் சிக்கும் கடற்றொழிலாளர்களை காக்க நவீன தொழில்நுட்பம்! விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
கடற்றொழிலாளர்கள் கடலில் ஆபத்தின் எதிர்கொள்ளும் வேளையில் அதனை உடனடியாக கண்காணித்து மீட்கும் நடவடிக்கையினை மேற்கொள்ளும் நவீன தொழில் நுட்பத்தினை கொண்டுவர வேண்டும் என வடமாகாண கடற்றொழில் rசங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
யாழ்ப்பாணத்தில் இன்று(7) இடம்பெற்ற ஊடகவியளாளர் சந்திப்பின் போது கடற்றொழில் இணையத்தின் செயலாளர் அன்னலிங்கம் அன்னராசா இதனைக் குறிப்பிட்டனர்.
நவீன தொழில் நுட்பம்
அண்மையில் பருத்துத்துறை பகுதியில் நான்கு கடற்றொழிலாளர்கள் கடலில் சென்று காணாமல் போனமை, தீவகம் பருத்தியடைப்புப் பகுதியில் கடற்றொழிலாளர்கள் கடலுக்கு சென்று காணாமல் போனவை போன்ற சம்பவங்கள் ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் அக்கறை செலுத்தவில்லை.

குறித்த விடயம் தொடர்பில் கடற்றொழிலாளர்கள் சார்பில் வரும் குரல் கொடுக்கவில்லை அத்துடன் கடல் தொழில் அமைச்சர் தான் ஆதரவாக இருப்பேன் அவர்களின் பிரச்சினைகளை பார்ப்பேன் என்று கூறுகிறார் ஆனால் எம்விதை நடவடிக்கையும் எடுக்கவில்லை கடற்றொழிலாளர்கள் காணாமல் போன பின்னர் அவர்களுக்கான நடவடிக்கைகள் தாமதமாக மேற்கொள்ளப்பட்டன.
கடன் தொழில் திணைகள அதிகாரிகளும் தடை செய்யப்பட்ட கடல் தொழில்களை நிறுத்துவதற்கு முன் வருவதில்லை அதற்கான சட்டங்களை பிரயோகிப்பதில்லை துணைக்கில் அதிகாரிகளும் அரசாங்கத்துடன் இணைந்து சிறு தொழிலாளர்களை மிரட்டுகின்ற செயற்பாடுகளை அண்மைக்காலமாக யாழ்ப்பாண கடல் தொழில் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றன.
கடற்றொழில் சமூகம்
கடற்றொழில் சமூகத்தின் பாதிப்பினை கவனத்தில் கொள்ள வேண்டும். வடக்கில் தமிழ்க் கடலை அழிப்பதனை நிறுத்துமாறு தமிழ் அரசியல் தலைவர்களை கேட்டுவருகின்றோம்.
ஆனால் அவர்களே எமது கடல் வளத்தினை அழித்து வருகி்னறனர். தேசியம் என்ற போர்வையில் சில தமிழ் சட்டத்தரணிகள் எமது கடலை தாரை வார்த்து கொடுப்பதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர் அவற்றை எம்மால் ஆதரிக்க முடியாது.

கடற்றொழில் சமூகம் சார்ந்த பொறிமுறை ஒன்றை உருவாக்கி கடலில் நடக்கும் சம்பவங்களை உடனடியாக அறிந்து அதற்கான நடவடிக்கை எடுப்பதற்கான பரிந்துரை ஒன்றை உருவாக்க வேண்டும் என இவர்கள் கேட்டுக் கொண்டனர்.
இனிமேல் எந்த ஒரு உயிரும் கடலில் காணாமல் போகக்கூடாது உயிர் போகக் கூடாது அதற்கேற்ற தொழில்நுட்ப வசதிகளை அரசாங்கம் உடனடியாக மேற்கொண்டு அதற்கான வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அதற்கு கடல் தொழிலாளர்கள் எப்போதும் தயாராக இருக்கின்றோம் என்றும் தெரிவித்தார்.