கட்டுநாயக்க விமான நிலையத்தில் விமானத்தில் இருந்து விழுந்த அதிகாரி
கட்டுநாயக்க விமான நிலையத்தில் விமானத்தில் இருந்து இறங்கும் போது, இராஜதந்திரி ஒருவர் நடமாடும் படிக்கட்டில் இருந்து கீழே விழுந்த நிலையில் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த அதிகாரிக்கு எலும்பு முறிவு ஏற்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் மேற்கொண்ட விசாரணைக்கு அமைய ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பயன்படுத்தும் இந்த நடமாடும் படிக்கட்டுகள் 20 ஆண்டுகளுக்கும் மேல் பழைமையானவை தெரியவந்துள்ளது.
பழைய படிக்கட்டு
அதற்கமைய, நீண்ட காலமாக இந்த இயந்திரங்களை புதிதாக கொள்வனவு செய்யவில்லை எனவும் பழைய இயந்திரங்களை தொடர்ந்தும் பயன்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

விமானம் வரும்போது பயணிகள் இறங்குவதற்கு ஒவ்வொரு வாசலிலும் இரண்டு நடமாடும் படிக்கட்டுகள் வழங்கப்பட வேண்டும்.
எனினும் பெரும்பாலும் ஒரு படிக்கட்டுகள் மட்டுமே வழங்கப்படுவதால், அனைத்து பயணிகளும் விமானத்திலிருந்து இறங்குவதற்கு பாரிய நேரம் எடுப்பதாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது.
அடுத்தடுத்த கேள்விகள் கேட்ட கோமதி, அதிரடி முடிவு எடுத்த பாண்டியன்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
பிரச்சனைகளுக்கு இடையில் ஒன்றாக இணைந்துள்ள மீனா, ஸ்ருதி, ரோஹினி... என்ன விஷயம், சிறகடிக்க ஆசை சீரியல் வீடியோ Cineulagam
பணத்தை திருடி நிலாவிடம் கொடுத்த சோழன், வீட்டிற்கு தேடிவந்த பிரச்சனை... அய்யனார் துணை சீரியல் Cineulagam
வளைகுடா நாடுகளில் இருந்து அதிகம் பணம் பெறும் இந்திய மாநிலங்கள் - தமிழ்நாடு எந்த இடத்தில்? News Lankasri