நாடாளுமன்ற உறுப்பினரின் வீட்டிற்கு விரைந்த கும்பல்!
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் லலித் எல்லாவலவின் பண்டாரகமவில் உள்ள வீட்டிற்கு நூற்றுக்கணக்கான மக்கள் பாதுகாப்பு வழங்கி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் லலித் எல்லாவலவின் பண்டாரகமவில் உள்ள வீட்டிற்கு மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் பலர் வருகை தருவதாக தகவல் வெளியானதையடுத்து கிராம மக்கள் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த சுமார் 300 பேர் தாமாக முன்வந்து அவரது வீட்டுக்கு பாதுகாப்பு வழங்கி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

மோட்டார் சைக்கிள்களிலும் முச்சக்கர வண்டிகளிலும் பொல்லுகளுடன் வருகை தந்த குழுவினர் இதனை தொடர்ந்து அங்கிருந்து சென்றுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதனை தொடர்ந்து கிராம மக்கள் நாடாளுமன்ற உறுப்பினரின் வீட்டிற்கு தொடர்ச்சியாக பாதுகாப்பு வழங்கி வருவதாகவும் கூறப்படுகின்றது.
லலித் எல்லாவல பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டத்திற்கு நகரும் ஈரான் போர்... இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்ட 6,500 டன் வெடிமருந்துகள் News Lankasri
நான் செத்துப்போகலாம்.. கண்கலங்கி அழும் அண்ணாமலை! சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
ஈரானிய ட்ரோன்கள் இனி காற்றில் கரையும்... ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இஸ்ரேல் வழங்கிய ஆயுதம் News Lankasri
சர்ச்சைகளுக்கு மத்தியிலும் கெத்து காட்டும் த்ரிஷா! மே குறித்து என்ன சொல்லியுள்ளார் தெரியுமா? Manithan