வவுனியாவில் கடும் பனிமூட்டம்! சிரமத்தை எதிர்கொண்ட சாரதிகள்
வவுனியாவில் இன்று (01.12.2022) காலை அதிகளவான பனிமூட்டம் காணப்பட்ட நிலையில் சாரதிகள் வாகனங்களை செலுத்துவதில் பெரும் இடையூறுகளை சந்தித்திருந்தனர்.
வவுனியா நகர்ப்புறம் உட்பட அனைத்து இடங்களிலும் காலை 8 மணிவரை அதிகளவான பனி மூட்டம் காணப்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
இதன் காரணமாக வேலைக்கு செல்வோர், வாகனச் சாரதிகள் எனப் பலரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் ஏ9 வீதி உட்பட வவுனியாவில் வீதியால் சென்ற வாகனங்கள் காலை 8 மணிவரை ஒளியைப் பாய்சியபடி சென்றுள்ளன.
அண்மைக்காலமாக குளிருடன் கூடிய காலநிலை வவுனியாவில் காணப்பட்ட போதிலும் இன்றைய
நிலை போன்றதான பனி மூட்டம் காணப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.