கனடாவில் இடம்பெற்ற வங்கி கொள்ளைச் சம்பவம் தொடர்பில் தமிழர் ஒருவர் கைது
கனடா - மிசிசாகாவில் வங்கியில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மிசிசாகாவைச் சேர்ந்த 30 வயதான தாமிரன் அமிர்தகணேசன் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பீல் பிராந்திய பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த 23ம் திகதி அன்று மதியம் 2 மணியளவில் Derry Road West and McLaughlin Road பகுதியில் உள்ள ஒரு வங்கியில் கொள்ளை நடந்ததாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
பொலிஸாரின் கூற்றுப்படி, சந்தேக நபர் வங்கியை விட்டு வெளியேறி கால் நடையாக தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல் வழங்குமாறு பொது மக்களிடம் கோரிக்கை
விரிவான குற்றவியல் விசாரணை மற்றும் ஆதாரங்கள் கண்டுபிடிப்பு உட்பட, மத்திய கொள்ளைப் பணியகத்தின் புலனாய்வாளர்கள் சந்தேக நபரை மறு நாள் அடையாளம் கண்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
சந்தேக நபர் ஒரு மோட்டலில் இருந்ததாகவும், சாம்பல் நிற வாகனத்தை ஓட்டிச் சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாறுவேடமிட்டு கொள்ளையடித்ததாக சந்தேகநபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், சந்தேகநபரை வியாழக்கிழமை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் தெரிந்தவர்கள் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
முத்து தலையில் இடியை இறக்கிய சிந்தாமணி.. அதிர்ச்சியில் அண்ணாமலை குடும்பம்.. சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்த வாரம் நடக்கப்போவது இதுதான் Cineulagam
எலான் மஸ்க்கிற்கு சீனா போட்ட ஸ்கெட்ச்: ஹனிடிராப்பில் தலைவர்களை சிக்க வைக்க சீனா திட்டம்? News Lankasri
ஏர் பிரான்ஸ் விமானம் தரையிறங்க அனுமதி மறுத்த அமெரிக்கா: ஒற்றை பயணியால் நடுவானில் உருவான பீதி News Lankasri