விறகு வெட்ட காட்டிற்கு சென்ற யுவதிக்கு ஏற்பட்ட நிலை! நுவரெலியாவில் சம்பவம்
நுவரெலியாவில் உள்ள டன்சினன் பகுதியில் விறகு வெட்ட காட்டிற்கு சென்ற 25 வயதான இளம் யுவதி காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று காலை 9.30 மணியளவில் விறகு வெட்ட சென்றதாக காணாமல் போன யுவதியில் தாயார் தெரிவித்துள்ளார். காணாமல் போன தனது மகள் பல நோய்களுக்கு மருத்துவ சிகிச்சை பெற்று வருவதாக, முன்னர் சில் சந்தர்ப்பங்களில் குறித்த யுவுதி காணாமல் போனதாகவும் நுவரெலியா பொலிஸாரிடம் தாய் தெரிவித்திருந்தார்.
இன்று பிற்பகல் வரையில் யுவதி வீடு திரும்பாத நிலையில், அருகில் உள்ளவர்களுக்கு தாயார் தகவல் வழங்கியுள்ளார்.
இதனையடுத்து, இராணுவத்தினர், பொலிஸார் மற்றும் பொது மக்கள் இணைந்து காட்டு பகுதியில் இன்று தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டிருந்ததாகவும் தெரிவிக்க்கப்படுகின்றது.
எனினும், யுவதி குறித்த தகவல்கள் எவையும் கிடைக்கவில்லை என பொலிஸார் கூறியுள்ளனர்.
ரணில் ஆதரவாளரின் சர்ச்சைக்குரிய பதிவு! அநுர அரசின் அதிரடியால் சேமிக்கப்பட்ட 3 கோடிக்கு மேற்பட்ட பணம்
நாட்டில் மீண்டும் தலைதூக்கியுள்ள பாதாள உலககும்பலின் நடவடிக்கைகள்! ஜிந்துப்பிட்டிய துப்பாக்கி சூட்டில் புதிய திருப்பம்
அமெரிக்க பேரரசின் வீழ்ச்சிக்கான அறிகுறி! இனிமேலும் நீங்கள் அதை செய்ய முடியாது.. அலி கமெனியின் பகிரங்க எச்சரிக்கை
ஆதிமுத்து யார் என்ற பரபரப்பிற்கு இடையில் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலின் படப்பிடிப்பு தள வீடியோ... என்ன விஷயம் பாருங்க Cineulagam
குணசேகரனின் தந்தை ஆதிமுத்து இவர்தான்.. போட்டோவுடன் வந்த கரிகாலன்.. எதிர்நீச்சல் சீரியலின் புரோமோ வீடியோ Cineulagam