விறகு வெட்ட காட்டிற்கு சென்ற யுவதிக்கு ஏற்பட்ட நிலை! நுவரெலியாவில் சம்பவம்
நுவரெலியாவில் உள்ள டன்சினன் பகுதியில் விறகு வெட்ட காட்டிற்கு சென்ற 25 வயதான இளம் யுவதி காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று காலை 9.30 மணியளவில் விறகு வெட்ட சென்றதாக காணாமல் போன யுவதியில் தாயார் தெரிவித்துள்ளார். காணாமல் போன தனது மகள் பல நோய்களுக்கு மருத்துவ சிகிச்சை பெற்று வருவதாக, முன்னர் சில் சந்தர்ப்பங்களில் குறித்த யுவுதி காணாமல் போனதாகவும் நுவரெலியா பொலிஸாரிடம் தாய் தெரிவித்திருந்தார்.
இன்று பிற்பகல் வரையில் யுவதி வீடு திரும்பாத நிலையில், அருகில் உள்ளவர்களுக்கு தாயார் தகவல் வழங்கியுள்ளார்.
இதனையடுத்து, இராணுவத்தினர், பொலிஸார் மற்றும் பொது மக்கள் இணைந்து காட்டு பகுதியில் இன்று தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டிருந்ததாகவும் தெரிவிக்க்கப்படுகின்றது.
எனினும், யுவதி குறித்த தகவல்கள் எவையும் கிடைக்கவில்லை என பொலிஸார் கூறியுள்ளனர்.
அழும் குழந்தைகளை வாஷிங் மெஷினுக்குள் அடைக்கும் காப்பக ஊழியர்கள்: அதிரவைத்துள்ள ஒரு செய்தி News Lankasri
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
திரிஷா பற்றிய முக்கிய ரகசியத்தை போட்டுடைத்த விஷ்ணு விஷால்! கோபப்பட மாட்டார் என நம்புறேன்.. Cineulagam
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri