கனடாவில் காணாமல்போன தமிழ் யுவதி தொடர்பில் குடும்பத்தினர் வெளியிட்டுள்ள அதிர்ச்சி தகவல்!
கனடாவில் காணாமல்போன தமிழ் யுவதி பிரசாந்தி அருச்சுனன் உயிரிழந்துள்ளதாக குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.
28 வயதான பிரசாந்தி அர்ச்சுனன் என்பவர் கடந்த 16ஆம் திகதி காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டு பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், அவரைக் கண்டுபிடிக்க உதவுமாறு பொலிசார் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.
குறித்த யுவதி கடைசியாக ஜனவரி 16, 2022 அன்று இரவு 7:45 மணிக்கு ஜேன் ஸ்ட்ரீட் மற்றும் ஃபின்ச் அவென்யூ வெஸ்ட் பகுதியில் காணப்பட்lதாகவும் பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டிருந்ததது.
இந்நிலையில்,அவர் உயிரிழந்துள்ளதாக குடும்பத்தினரால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
உயிரிழந்த 26 வயதுடைய பிரசாந்தி அர்ச்சுனன், யாழ்ப்பாணம் வேலணையைப் பிறப்பிடமாகவும், கனடா நோர்த் யோர்க்கை வதிவிடமாகவும் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்திகள்....
கனடாவில் தேடப்படும் தமிழ் யுவதி! - பொது மக்களிடம் உதவி கோரியுள்ள பொலிஸார்
you my like this video
10 நாட்களாக வலியில் துடித்துள்ள கயல் சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி... அவரே வெளியிட்ட வீடியோ Cineulagam
அண்ணாமலைக்கு தெரியவந்த வீட்டை அடமானம் வைத்த விஷயம், மனோஜிற்கு கொடுத்த தண்டனை... சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ Cineulagam