வவுனியாவில் காணாமல்போன மாணவன் புதுக்குடியிருப்பில் கண்டுபிடிப்பு
வவுனியாவில் காணாமல்போனதாக பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்ட 17 வயது மாணவன் புதுக்குடியிருப்பு பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வவுனியா, தோணிக்கல் பகுதியில் வசித்து வந்த மணிவண்ணன் சிவானுஜன் என்ற 17 வயது மாணவன் நேற்று (07.10) காலை வீட்டில் இருந்து சென்ற நிலையில் காணவில்லை என மாணவனின் தந்தையால் வவுனியா பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
குறித்த முறைப்பாடு தொடர்பில் வவுனியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
இந்நிலையில், குறித்த மாணவன் புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள பேரூந்து நிலையத்தில் நிற்பதாக மாணவனின் நண்பனுக்கு முச்சக்கர வண்டி சாரதி ஒருவர் மூலம் தெரிவிக்கப்பட்டதையடுத்து, மாணவனின் பெற்றோருக்கு குறித்த தகவல் தெரியப்படுத்தப்பட்டது.
அத்துடன், குறித்த முகச்சக்கர வண்டி சாரதி மாணவன் வீட்டில் இருந்து முரண்பட்டுக் கொண்டு வந்துள்ளதாக அறிந்த நிலையில், மாணவனை புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்.
அங்கு சென்ற மாணவனின் பெற்றோர், புதுக்குடியிருப்பு பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளையடுத்து மாணவனை பொறுப்பேற்றுக் கொண்டதுடன், இது தொடர்பில் வவுனியா பொலிஸாருக்கும் தெரியப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 7 மணி நேரம் முன்

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
