காணாமல் போன ரோஹித்த ராஜபக்சவின் பூனை அவன்கார்ட் நிறுவன தலைவரது வீட்டில்
பிரதமர் மகிந்த ராஜபக்சவின்(Mahinda Rajapaksha) இளைய புதல்வர் ரோஹித்த ராஜபக்சவிற்கு(Rohitha Rajapaksha) சொந்தமான பூனை ஒன்று காணாமல் போனதாக அவர் தனது முகநூல் பக்கம் ஊடாக அறிவித்திருந்தார்.
காணாமல் போன பூனை இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அந்த பூனை அவன்கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிசங்க சேனாதிபதியின்(Nissanga Senathibathy) வீட்டில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நிசங்க சேனாதிபதி, ரோஹித்த ராஜபக்சவின் வீட்டுக்கு அருகில் வசிப்பதுடன் அவரது வீட்டில் 35 பூனைகள் வளர்க்கப்படுவதாக கூறப்படுகிறது.
ரோஹித்தவின் பூனை இறுதியாக பெத்தகான பிரதேசத்தில் காணப்பட்டுள்ளது. அந்த பூனையை கண்டுபிடித்து தருபவர்களுக்கு பெறுமதியான பரிசு வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. பலர் இதற்கு பதிலளித்திருந்தனர். எனினும் தற்போது பூனை கிடைத்துள்ளது.
இதனையடுத்து ரோஹித்த ராஜபக்ச பூனையை கண்டுபிடித்து தருமாறு முகநூலில் வெளியிட்டிருந்த அறிவிப்பை நீக்கியுள்ளார். ரோஹித்த ராஜபக்ச வளர்க்கும் இந்த பூனையின் விலை சுமார் 3 ஆயிரம் டொலர்கள் என கூறப்படுகிறது.


பிரித்தானியாவில் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் Amazon - 40 பில்லியன் பவுண்டு முதலீடு News Lankasri
