அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் எதிர்ப்பு

Missing Persons Government Of Sri Lanka Sri Lankan Peoples
By Parthiban Jan 08, 2024 07:32 PM GMT
Report

போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் நீண்டகாலமாக கோரி வரும் சர்வதேச பங்களிப்புடன் ஒரு நிலைமாறுகால நீதிப் பொறிமுறையை ஸ்தாபிப்பதற்கு பதிலாக உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை (TURC) ஸ்தாபிப்பதற்கான அரசாங்கத்தின் முயற்சிகள் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கடுமையான எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளனர்.

,500 நாட்களுக்கும் மேலாக வயிற்றுக்கு போதிய உணவின்றி, வெயிலையும், மழையையும் பொருட்படுத்தாமல் அன்புக்குரியவர்களின் தலைவிதியை வெளிப்படுத்த வேண்டுமென வலியுறுத்தி, வீதியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தமிழ் தாய்மார்கள், இந்த ஆணைக்குழு தமிழர்களை ஏமாற்றும் வேலையா என கேள்வி எழுப்பியுள்ளதோடு, புதிய ஆணைக்குழுவை தென்னிலங்கைக்கு கொண்டு சென்று சிங்களவர்களுக்காக பணியாற்றுமாரு குறிப்பிட்டுள்ளனர்.

“இது தமிழர்களை ஏமாற்றும் வேலையா? வெளிநாடுகளை ஏமாற்றும் வேலையாகவா இதனை கொண்டுவந்துள்ளார்கள்.

அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் எதிர்ப்பு | Missing Persons Relation Request Against Turc

பலனற்ற அமைப்புக்கள்

ஆணைக்குழுக்களை கொண்டுவரும் நீங்கள் அதற்கான வேலைகளை செய்ய வேண்டும். அதனை நீங்கள் செய்வதில்லை. உங்களுக்கு பிரயோசனமாக அமையும் வகையிலும், வேறு நாடுகளை ஏமாற்றும் வகையில், ஜெனீவாவை ஏமாற்றும் வகையில் ஆணைக்குழுக்களை திணிக்கின்றீர்களேத் தவிர அதில் எமக்கு எவ்வித பிரயோசனமாக விடயமும் இல்லை.

பிரித்தானிய பிரதமருக்கு தமிழர் பேரவை விடுத்துள்ள கோரிக்கை

பிரித்தானிய பிரதமருக்கு தமிழர் பேரவை விடுத்துள்ள கோரிக்கை


இதனை ஏன் கொண்டு வருகிறீர்கள்?அந்த ஆணைக்குழுக்களை தெற்கில் அதனை பயன்படுத்துங்கள். உங்கள் சிங்கள மக்களுக்கு அதனை பயன்படுத்தினால் அது உங்களுக்கு சாதகமாக அமையும்." இதுவரை அரசாங்கம் கொண்டுவந்த ஆணைக்குழுவின் வாசலில் போய் தமிழ்த் தாய்மார்கள் நின்றிருந்தும் எவ்வித பலனும் கிடைக்கவில்லை என, வார இறுதியில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தி மன்னார் மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் சங்கத்தின் தலைவி மானுவல் உதயசந்திர மேலும் வலியுறுத்தியுள்ளார்.

அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் எதிர்ப்பு | Missing Persons Relation Request Against Turc

“எத்தனையோ ஆணைக்குழுக்களை இவர்கள் கொண்டுவந்துள்ளார்கள். ஆணைக்குழுக்களின் வாசலிலேயே நாங்கள் போய் நின்று, காலங்களை கடந்ததேத் தவிர, எந்தவொரு ஆணைக்குழுவும் வந்து எங்களுக்கு எந்தவொரு நீதியையும் வழங்கவில்லை.

இப்போதும் அதேபோல் தெற்கிலும், கிழக்கிலும் ஒரு ஆணைக்குழுவை கொண்டுவந்துள்ளார்கள் சமாதானம் எனக் கூறி, ஒவ்வொரு அமைப்புக்களையும் அழைத்து கதைக்கின்றார்கள்.”

பதினான்கு வருடங்கள்

இலங்கையில் உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை அமைப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கான சட்டமூலம், வெளிவிவகார அமைச்சரின் பணிப்புரைக்கு அமைய, 2024 ஜனவரி முதலாம் திகதி வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.

அரச ஊழியர்களுக்கு வழங்கப்படவுள்ள 5 ஆயிரம் ரூபா

அரச ஊழியர்களுக்கு வழங்கப்படவுள்ள 5 ஆயிரம் ரூபா


பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு நீதி கோரும் போராட்டத்தை 2,500 நாட்களைக் கடந்து தொடர்ச்சியாக முன்னெடுத்துவரும் தாய்மார், பதினான்கு வருடங்களுக்கு மேலாக காணாமல் போயுள்ள தமது அன்புக்குரியவர்களுக்கு நீதியை நிலைநாட்டுமாறு ஒரே குரலாக கோரிக்கை விடுத்துள்ளனர்.

யுத்தத்தின் போதும் அதன் பின்னரும் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளைத் தேடி வடக்கு, கிழக்கில் 2,500 நாட்களுக்கும் மேலாகப் போராடி வரும் முன்னணி உறுப்பினர்களின் தகவல்களுக்கு அமைய, நீதி கிடைக்காமல் உயிரிழந்த பெற்றோரின் எண்ணிக்கை 210ற்கும் அதிகமாகும்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 


அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US