காணாமல் போனவர்களின் உறவினர்களை காணாமல் போனோர் அலுவலகம் அச்சுறுத்துகிறது

Investigation Letter Human rights Journalist
By Independent Writer Sep 06, 2021 02:29 PM GMT
Independent Writer

Independent Writer

in சமூகம்
Report

காணாமல் போனவர்களைத் தேடும் இலங்கையின் முதன்மையான அமைப்பு, பாதிக்கப்பட்ட குடும்பங்களின் தனிப்பட்ட தகவல்களைக் கோருவதால் அச்சமடைந்துள்ளனர்.

சர்வதேச நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்ட தகவல்கள் உள்ளிட்ட விடயங்களை அலுவலகம் கோரியுள்ளதால் தாம் அச்சமடைந்ததாகச் சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற மனித உரிமை ஆர்வலரும், காணாமல் போன தனது கணவருக்காக சுமார் 12 வருடங்களாகப் போராடி வருபவருமான சந்தியா எக்னலிகொட தெரிவித்துள்ளார்.

"காணாமல் போனோர் முறைப்பாடுகள் குறித்து மேலதிக விபரங்களைப் பெறுதல்" என்ற தலைப்பில் கடந்த ஆகஸ்ட் மாதம் 4ஆம் திகதி, காணாமல் போனோர் அலுவலகத்தின் தரவு முகாமைத்துவ பிரதானியான ஏ.என் நுவன் அனுப்பி வைத்த கடிதம் தனக்கு அதிர்ச்சியளித்ததாகச் சந்தியா எக்னெலிகொட தெரிவித்துள்ளார்.

"ஏனென்றால், பல வருடங்களுக்கு முன்னர் செய்யப்பட்ட முறைப்பாடுகள் தொடர்பில் நீங்கள் எடுத்த நடவடிக்கைகள் அல்லது விசாரணைகள் பற்றிய எந்த புதுப்பிப்பும் இல்லாத நிலையில், அமைப்புக்குத் தொடர்பில்லாத தனிப்பட்ட ஆவணங்களுக்கான உங்கள் வேண்டுகோள், நீதிக்குப் பதிலாக வன்முறை மற்றும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளதாக பாதிக்கப்பட்ட நபரான நான் உணர்கின்றேன்.” என அவர் அனுப்பியுள்ள பதில் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

2010 ஜனவரி 24ஆம் திகதி கடத்தப்பட்டுக் காணாமல் போன தனது கணவரும், ஊடகவியலாளருமான பிரகீத் எக்னலிகொடவை கண்டறிய மேற்கொண்ட முயற்சிகள் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகள் எவ்வாறு நடத்தப்பட்டது என்பது குறித்துக் காணாமல் போனோர் அலுவலகத்தின் தரவு முகாமைத்துவ பிரதானிக்கு மிக நீண்ட விளக்கமளித்துள்ள சந்தியா எக்னலிகொட, தம்முடைய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுமா எனவும் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

கடிதத்தில் அவரது சந்தேகங்களுக்கான நியாயமான காரணங்களையும் அவர் உள்ளடக்கியுள்ளார். தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவால் நியமிக்கப்பட்ட அரசியல் பழிவாங்கும் விசாரணை ஆணைக்குழுவின் தலைவராகச் செயற்பட்ட ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி உபாலி அபேரத்ன மற்றும் ஆணைக்குழுவின் ஏனைய உறுப்பினர்கள் பிரகீத் கடத்தல் தொடர்பான வழக்குகளை விசாரணைகளில் குற்றவாளிகளாகக் குறிப்பிடப்பட்ட இராணுவ புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளை விடுதலை செய்யுமாறு பரிந்துரைத்துள்ளதாக மனித உரிமை ஆர்வலர் சந்தியா எக்னெலிகொட சுட்டிக்காட்டியுள்ளார்.

"இந்த ஆணைக்குழு பாதிக்கப்பட்ட எனக்கு எவ்வித வாய்ப்பும் அளிக்காமல் அல்லது அழைப்பும் விடுக்காமல், நீதிமன்றத்தின் உத்தரவுகளைப் பொருட்படுத்தாமல், வழக்கின் சாட்சிகளை அச்சுறுத்தி ஒருதலைபட்சமாகச் செயற்படுகின்றது.” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

குற்றவாளிகளை விடுவித்த ஆணைக்குழு, முறையான விசாரணையை நடத்தியதாகவும், பிரகீத் காணாமல் போனமை குறித்த உண்மையை வெளிக்கொண்டு வந்த அதிகாரிகளைப் பாராட்டுவதற்குப் பதிலாகத் தண்டித்துள்ளதாகக் குற்றஞ்சாட்டியுள்ள சந்தியா எக்னெலிகொட, இந்த தீர்மானமானது, இலங்கை குடிமகளாக அரசியல் யாப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ”சட்ட அமுலாக்கம் மற்றும் சட்டத்தின் ஆட்சி நியாயமாக இருக்க வேண்டு" என்ற தனது அடிப்படை அரசியலமைப்பு உரிமையை மீறுவதாக அமைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மீறல்களுக்குத் தலைமை வகித்த ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி உபாலி அபேரத்ன தற்போது காணாமல் போனவர்கள் தொடர்பான அலுவலகத்தின் தலைவராகச் செயற்படுவதாகவும், இந்த அலுவலகத்தை ஒரு பக்கச்சார்பற்ற, சுயாதீனமான அமைப்பாக நம்பலாமா எனவும், அது பாதிக்கப்பட்டவருக்குத் தேவையான உளவியல் மற்றும் சமூக ஆதரவையும் பாதுகாப்பையும் வழங்குகிறதா? எனவும் காணாமல் போனவர்கள் தொடர்பான அலுவலகத்தில் தரவு பிரதானியிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

2016ஆம் ஆண்டு நிலைமாறு கால நீதி பொறிமுறையின் முதல் படியாக நிறுவப்பட்ட காணாமல்போனோர் அலுவலகத்தின் தலைவர் உள்ளிட்ட ஆணையாளரின் நியமனமும், தற்போதைய அதிகாரிகள் நியமனம் மற்றும் அமைப்பு முற்றிலும் வேறுபட்டுள்ளதோடு, அலுவலகத்தில் சுயாதீனத்தன்மை குறித்த நம்பகத்தன்மை சிதைந்துள்ளது.” சர்வதேச நிறுவனங்கள் மற்றும் நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றக்கூடிய ஒரு சக்திவாய்ந்த நிறுவனம் காணாமல்போனோர் குறித்த அலுவலகம் என்பதை நினைவு கூர்ந்த சந்தியா எக்னெலிகொட, ICRC மற்றும் UNWGEID ஆகிய நிறுவனங்களுடன் நேரடியாகக் கையாளாமல் கடிதங்களைக் கோருவது மறைமுக அழுத்தமாகவே பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டுக் காணாமல்போனமை குறித்த மேலதிக தகவல்கள் பெற்றுக்கொள்ள வேண்டுமெனின் வழக்கு விசாரணைகளை அவதானிக்குமாறு சந்தியா எக்னெலிகொட காணாமல் போனோர் அலுவலகத்திற்கு அறிவித்துள்ளார்.

காணாமல் போனவர்களின் அலுவலகம் காணாமல் போன, காணாமல் போன குடும்பங்கள் அனுபவிக்கும் வலி மற்றும் அதிர்ச்சியை ஏற்றுக்கொள்கிறது. காணாமல் ஆக்கப்பட்டவர்கள் / காணாமல் போனவர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்குப் பொறுப்புக்களை நிறைவேற்ற நாம் கடமைப்பட்டுள்ளோம்,” என அவர் காணாமல் போனவர்கள் தொடர்பான அலுவலகத்தின் முன்னாள் தலைவரான ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவித்த விடயம் கடிதத்தின் நிறைவில் குறிப்பிடப்பட்டுள்ளது.  

மரண அறிவித்தல்

மட்டுவில், பெரிய அரசடி, வெள்ளவத்தை, Harrow, United Kingdom, Oxford, United Kingdom

28 Sep, 2025
மரண அறிவித்தல்

நானாட்டான், பிரித்தானியா, United Kingdom

18 Sep, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Wuppertal, Germany

01 Oct, 2025
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

30 Sep, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

03 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் நவாலி வடக்கு, Jaffna, வெள்ளவத்தை

17 Oct, 2024
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, North Harrow, United Kingdom

26 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
மரண அறிவித்தல்

மீரிகம, மன்னார், ஸ்கந்தபுரம்

04 Oct, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, காங்கேசன்துறை, Scarborough, Canada

16 Oct, 2024
மரண அறிவித்தல்

இருபாலை, கொழும்பு, Scarbrough, Canada

01 Oct, 2025
மரண அறிவித்தல்

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Savigny-le-Temple, France

06 Oct, 2015
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மாகியம்பதி, சண்டிலிப்பாய், Scarborough, Canada

02 Oct, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன், கொழும்பு 15

04 Oct, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு

05 Oct, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Lugano, Switzerland

04 Oct, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன் கிழக்கு, கோண்டாவில் மேற்கு, கனடா, Canada

04 Oct, 2010
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்புத்துறை, Scarborough, Canada

01 Oct, 2025
நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்லைப்பிட்டி கிழக்கு, Jaffna, கொழும்பு, Markham, Canada

04 Oct, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, பேர்ண், Switzerland

03 Oct, 2023
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, சுவிஸ், Switzerland

04 Oct, 2009
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், அளவெட்டி மேற்கு

03 Oct, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US