பிரித்தானியாவில் காணாமல்போன இந்திய சிறுமியை தேடும் பணிகள் தீவிரம்
பிரித்தானியாவில் கிழக்கு லண்டன் அருகே 15 வயதுடைய இந்திய சிறுமியொருவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சிறுமி நேற்று (14.06.2024) முதல் காணமல் போயுள்ளதாக எசெக்ஸ் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து பொலிஸார் தீவிர விசாரணையை தொடங்கியுள்ளனர்.
பொலிஸ் அறிக்கை
எசெக்ஸ் Benfleet பகுதியில் வசிக்கும் இந்திய குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு குழந்தைகளில் ஒருவரான அனிதா கோசி (Anita Kosi) 10ஆம் வகுப்பு படிக்கும் மாணவியாவார்.
இந்த சிறுமியின் குடும்பம் இந்தியாவின் கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் இருந்து பல ஆண்டுகளுக்கு முன் பிரித்தானியாவிற்கு வந்துள்ளனர்.

மேலும், காணமல் போன சிறுமி 5 அடி 4 அங்குல உயரம், நீண்ட கறுப்பு முடி மற்றும் கண்ணாடியுடன் காணப்படுவார் என எசெக்ஸ் பொலிஸார் ஒரு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.
அவர் காணாமல் போனபோது வெள்ளை மேலாடை, கருப்பு கால்சட்டை மற்றும் கருப்பு மற்றும் வெள்ளை நிற காலணிகளை அணிந்திருந்ததாகவும் அவர் ஒரு கைப்பையையும், செம்மஞ்சள் நிற கைப்பிடிகள் கொண்ட சாம்பல் நிற தோல் துணி பையையும் எடுத்துச் சென்றார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அனிதா நேற்றுமதியம் தொடருந்தில் லண்டனுக்குப் பயணம் செய்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
இன்னும் 6 வாரங்கள்... ஐரோப்பாவின் மொத்த விமான சேவையும் ஸ்தம்பிக்கும்: வெளியான எச்சரிக்கை News Lankasri
பாடகியுடன் சுற்றித்திரியும் கணவர்... பிறந்த நாளில் ஆர்த்தி ரவி உருக்கம்! வைரலாகும் புகைப்படங்கள் Manithan
டாப் 5-வில் ஒரே ஒரு இடத்தை பிடித்த விஜய் டிவி.. மாஸ் காட்டும் சன் டிவி.. சீரியல் TRP விவரங்கள் Cineulagam
உக்ரைனிய வான்பரப்பை சூழ்ந்த ரஷ்ய ஏவுகணைகள்: சுட்டு வீழ்த்தப்பட்ட 600 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் News Lankasri