சட்டவைத்திய அதிகாரியை காணவில்லை-மனைவி முறைப்பாடு
களுத்துறை போதனா வைத்தியசாலையின் உதவி சட்ட வைத்திய அதிகாரி காணாமல் போயுள்ளதாக முறைப்பாடு கிடைத்துள்ளது என களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாலத்திற்கு அருகில் கிடந்த மருத்துவரின் கார்
எல்.சீ. ஜயசிங்க என்ற மருத்துவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார். இந்த உதவி சட்ட வைத்திய அதிகாரியின் மனைவி செய்த முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
மருத்துவர் ஓட்டி சென்றதாக கூறப்படும் கார் நேற்று முன்தினம் இரவு களுத்துறை பாலத்திற்கு அருகில் இருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மருத்துவர் ஆற்றில் விழுந்தாரா என்பதை கண்டறிய இரண்டு படகுகளை பயன்படுத்தி களுகங்கை ஆற்றில் தேடுதல் நடத்தப்பட்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.