காணாமல்போயுள்ள 14 வயது சிறுமி: பொலிஸார் வெளியிட்ட தகவல்
களுத்துறை பிரதேசத்தில் 14 வயதுச் சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ளனர் என பேருவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
களுத்துறை, தசகம எனும் பிரதேசத்தைச் சேர்ந்த சிறுமியொருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்
கடந்த 25ம் திகதி குறித்த சிறுமி வீட்டை விட்டும் சென்றுள்ள நிலையில், தான் துறவறம் பூணுவதற்காக வீட்டை விட்டும் வெளியேறுவதாக அவர் கடிதெமொன்றை வைத்துவிட்டுச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
மேலதிக விசாரணை
எனினும் சிறுமி எங்கு சென்றுள்ளார் என்பது குறித்து உறுதியாக கூறமுடியவில்லையென பேருவளை பொலிஸார் கூறியுள்ளனர்.
இந்நிலையில், சம்பவம் தொடர்பில் பேருவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW
|