பூஸ்டர் தடுப்பூசி பற்றி பிழையான தகவல்கள் வெளியிடப்படுகின்றன
பூஸ்டர் தடுப்பூசி பற்றி பிழையான தகவல்கள் வெளியிடப்பட்டு வருவதாக ராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
பூஸ்டர் தடுப்பூசி டோஸ் தொடர்பில் சமூகத்தில் பல்வேறு தகவல்கள் பரப்பப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
எனினும் முதல் டோஸ் மற்றும் இரண்டாவது டோஸ் மாத்திரைகளை ஏற்றிய போது ஏற்படாத பக்க விளைவுகள் எதுவும் பெரிதாக மூன்றாவது டோஸ் போடும் போது ஏற்பட்டதாக இதுவரையில் கண்டறியப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் சுகாதார அமைச்சு தொடர்ந்தும் ஆராய்ந்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.
எனினும், மூன்றாவது டோஸ் தடுப்பூசியை போட்டுக் கொள்ள வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சமூக ஊடகங்களில் பூஸ்டர் டோஸ் பற்றி பிழையான தகவல்கள் வெளியிடப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
கோவிட் அலையை கட்டுப்படுத்துவதற்கான சிறந்த வழி பூஸ்டர் டோஸ் போட்டுக் கொள்வதேயாகும் என பேராசிரியர் சன்ன ஜயசுமன ஊடகங்களிடம் தெரிவித்துளார்.
லண்டனில் 36வது மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்த இந்திய குடும்பம்., சம்பவம் குறித்து வெளியான தகவல் News Lankasri
துரோகம் செய்தவர்கள் மீதும் அன்பு செலுத்தும் குணம் கொண்ட டாப் 3 ராசிகள் ... இவர்கள் கிடைப்பதே வரம்! Manithan
முதல்வர் விஜயை குடும்பத்துடன் சந்தித்த நடிகை சினேகா! வெளியிட்டுள்ள உணர்வுபூர்வ பதிவு வைரல்! Manithan