இளம் பெண் திடீரென மரணம்! பிரேத பரிசோதனையில் வெளியான தகவல்
கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த இளம் பெண் ஒருவர் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்துள்ளார்.
மினுவாங்கொடை, ஜாபாலவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த செனுரி தக்ஷிலா என்ற 22 வயதுடைய திருமணமான பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பிரேத பரிசோதனையில் வெளியான தகவல்
மினுவாங்கொடை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று பெண்ணின் நிலைமை கவலைக்கிடமானதை அடுத்து கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, உயிரிழந்த செனுரியின் மரண விசாரணையில் அவர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டிருந்தமையே மரணத்திற்கு காரணம் என தெரியவந்துள்ளது.
குறித்த பெண் சுகயீனம் காரணமாக கடந்த 18ஆம் திகதி மினுவாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு நான்கு நாட்களாக சிகிச்சை பெற்று வந்த அவர், கடந்த 22ஆம் திகதி கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 20 நிமிடங்களில் உயிரிழந்துள்ளார்.
வைத்தியசாலை மீது குற்றச்சாட்டு
எவ்வாறாயினும், நான்கு நாட்கள் மினுவாங்கொடை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த போதிலும், அங்கிருந்த வைத்தியர்களால் அவருக்கு டெங்கு பாதிப்பு இருப்பதை கண்டறிய முடியவில்லை என பெற்றோர் குற்றம் சுமத்துகின்றனர்.

இந்நிலையில், உயிரிழந்த செனுரியின் பெற்றோரும் கணவரும் அவரது மரணத்திற்கு மினுவாங்கொடை ஆதார வைத்தியசாலை வைத்தியர்களின் கவனக்குறைவே பிரதான காரணம் என தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், அவரது இறுதிக்கிரியைகள் நாளை (25) மினுவாங்கொடை ஜாபாலவத்தை பொது மயானத்தில் நடைபெறவுள்ளது.