கைவிடப்பட்ட பஸ்களை கடல்வாழ் இனப்பெருக்கத்திற்காக பயன்படுத்திய அமைச்சு

Srilanka Fishermen Douglas devananda Negambo
By Kanamirtha Jul 03, 2021 02:18 PM GMT
Kanamirtha

Kanamirtha

in சமூகம்
Report

இலங்கை நான்கு பக்­கமும் கடலால் சூழப்­பட்ட கடல்­வளம் நிறைந்த தீவு என்­பதால் இங்கு மீன் பிடி என்­பது முக்கிய ஜீவனோபாயமாக உள்ளது.

இதன் காரணமாக செயற்­கை­யான முறையில் கடல்வாழ் உயி­ரி­னங்­களின் இனப்­பெ­ருக்­கத்­திற்கு ஏது­வான சூழலை உரு­வாக்கும் நோக்கில், கைவி­டப்­பட்ட பஸ்­களை கடலில் இறக்கும் திட்டம் தற்­போது தீவி­ர­மாக முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றது.

ஆயினும் இலங்­கையில் நடை­பெற்ற உள்­நாட்டு யுத்த காலத்தில் மீன­வர்கள் கட­லுக்கு செல்­வதில் பாரிய அளெ­க­ரி­யங்­களை சந்­தித்­தபோதிலும் யுத்­தத்­திற்கு பின்­னரும் அவர்­களின் வாழ்­வா­தார பிரச்­சி­னைகள் தீர­வில்லை.


குறிப்­பாக வடக்கு கடல் பகு­தியில் இந்­திய மீன­வர்கள் அத்­து­மீறி மீன்­பி­டிப்­ப­தா­கவும், அவர்கள் கடல் உயி­ரி­னங்­களின் இருப்­புக்கு அச்­சத்தை ஏற்­ப­டுத்தும் மோட்டார் பட­கு­களை பயன்­ப­டுத்தி கடல் வளங்­களை அழித்­து­வி­டு­வ­தா­கவும் ஒரு குற்­றச்­சாட்டு பல ஆண்­டு­க­ளாக முன்வைக்கப்பட்டு வருகின்றது.

இது ஒரு புறம் இருக்க அண்­மையில் இடம்­பெற்ற கப்பல் விபத்­துகள் நமது கடல் வளத்தை அதி­க­ளவில் பாதித்­துள்­ளது. சிறிய மீன்கள் தொட்டு திமிங்­கலம், ஆமை என பல கடல்வாழ் உயி­ரி­னங்கள் இறந்து கரை­யொ­திங்­கி­யதை காண­மு­டிந்­தது. இவை கடல்வாழ் உயி­ரி­னங்­களின் இருப்­புக்கே அச்­சத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

இந்­நி­லையில், கடற்­றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவா­னந்­தாவின் ஆலோ­ச­னையின் பிர­காரம், வடக்கு கடலில் கடல்வாழ் உயி­ரி­னங்­களின் இனப்­பெ­ருக்­கத்­திற்கு ஏது­வான சூழலை உரு­வாக்கும் நோக்­கி­லேயே கைவி­டப்­பட்ட பஸ்­களை கடலில் இறக்கும் திட்டம் தற்­போது முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றது.

கடற்­ப­டையின் ஒத்­து­ழைப்­புடன் கடற்­றொழில் நீரியல் வளத்­துறை திணைக்­க­ளத்­தினால் குறித்த செயற்­றிட்­டத்தின் கீழ் முதற்­கட்­ட­மாக இலங்கை போக்­கு­வ­ரத்து சபைக்கு சொந்­த­மான கைவி­டப்­பட்ட 40 பஸ்­களை கடலில் இறக்கும் நோக்கில் இந்தத் திட்டம் தயா­ரிக்­கப்­பட்­டுள்­ளது.

சயுரு கப்­பலின் மூலம் யாழ்ப்­பாணம் – காங்­கே­சன்­துறை துறை­மு­கத்­தி­லி­ருந்து பஸ்கள் ஏற்­றிச்­செல்­லப்­பட்டு கடலில் இறக்­கப்­பட்­டன. கைவி­டப்­பட்ட பஸ்கள் மற்றும் ரயில் பெட்­டி­களை கடலில் இறக்கி விடு­வதன் மூலம் கடல்வாழ் உயி­ரி­னங்­களின் இனப்­பெ­ருக்­கத்­திற்கு ஏது­வான கடல் நீரடிப் பாறை­க­ளுக்கு நிக­ரான சூழலை செயற்­கை­யான முறையில் உரு­வாக்கும் நோக்­கி­லேயே கடற்­றொழில் அமைச்­சினால் இந்தத் திட்டம் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­றது.

அதா­வது, கட­லு­யி­ரி­னங்­களின் இனப்­பெ­ருக்­கத்­திற்கு ஏது­வான கடல் பிர­தே­சங்­க­ளை­ அ­டை­யா­ளங்­கண்டு குறித்த பிரதேசத்தில், பாவ­னைக்கு பய­னற்று கைவி­டப்­பட்ட இலங்கை போக்­கு­வ­ரத்து சபைக்குச் சொந்­த­மான பஸ்­களை இறக்கி விடு­வதன் மூலம் மீன் இனங்­களின் இனப்­பெ­ருக்­கத்­திற்கு ஏது­வான சூழலை உரு­வாக்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

இந்­நி­லையில் இலங்­கையில் மீன்கள் இனப்­பெ­ருக்­கத்­திற்­காக பழைய ரயில் பெட்­டி­க­ளையும் கடலில் இறக்கப்போவதாக இலங்கை மீன்­வ­ளத்­துறை அமைச்சர் தெரி­வித்­துள்ளார். இதற்கு கடும் கண்­டனம் தெரி­வித்த தமிழ்­நாட்டு மீன­வர்கள், ஆர்ப்­பாட்டம் நடத்­தினர்.

அத்தோடு, தமி­ழக மீன­வர்கள் மீன்­பிடி தொழிலில் ஈடு­படும்போது மீன் பிடி வலைகள் இந்த பஸ்­களில் சிக்கி கிழிந்து மீன­வர்கள் வலை­களை இழக்கும் சூழ்­நிலை ஏற்­படும்.

இதனால் படகு ஒன்­றுக்கு ஒரு இலட்சம் ரூபாய் வரை நஷ்டம் ஏற்­படும். காலப்போக்கில் மீன் பிடி அழியும் சூழல் ஏற்­படும். இலங்கை மீன் வளத்­துறை இந்­திய மீன­வர்­களின் மீன் பிடி தொழிலை அழிக்கும் நோக்கில் இரக­சி­ய­மாக திட்­ட­மிட்டு இலங்கை கடற்­ப­டையின் உத­வி­யுடன் இந்தத் திட்­டத்தை செயல்­ப­டுத்தி வரு­கி­றது.

இலங்கை அரசு கைவி­டப்­பட்ட பஸ்­களை பழைய இரும்பு விலைக்கு விற்று அதில் வரும் பணத்தில் செயற்கை பவ­ளப்­பா­றைகள் அமைத்து கடல்வாழ் உயி­ரி­னங்­களின் எண்­ணிக்­கையை உயர்த்­தலாம். இலங்கை அரசு அதை செய்­யாமல் உலக நாடு­களில் எங்கும் செய்­யாத ஒரு செயலை செய்து வரு­கி­றது. இலங்கை அரசின் இந்த அறி­விப்பை திரும்­ப­பெற மத்­திய, மாநில அர­சுகள் நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

இந்­நி­லையில் அமைச்சர் டக்ளஸ் தேவா­னந்தா, “இந்த திட்­டத்­ததால் கடல் வளம் அழிய சாத்­தியம் இல்லை. காரணம் இந்­தி­யாவில் குறிப்­பாக தமிழ்­நாட்டில் கொன்­கிரீட் தூண்கள் அமைத்து நடுக்­க­டலில் செயற்கை பவ­ளப்­பா­றைகள் உரு­வாக்­கப்­பட்டு வரு­கின்­றன.

கடலில் இறக்கும் இந்த பழைய பஸ்கள் கடல் சீற்றம் மற்றும் கடல் நீரோட்டம் கார­ண­மாக இந்­திய எல்­லைக்குள் போகாமல் இருக்க பஸ்ஸின் நான்கு புறமும் கொன்­கிரீட் போட்டு உறு­தி­யாக கடலில் நிறுத்­தப்­பட்டு வரு­கின்­றன.

இலங்கை மீன்­வ­ளத்­துறை இந்த திட்­டத்தை இலங்கை மீன­வர்­களின் வாழ்­வா­தா­ரத்தை மேம்­ப­டுத்தும் நோக்கில் மட்டுமே செய்து வரு­கி­றது இலங்கை மீன் வளத்­து­றையால் கடலில் போடப்­படும் இந்த பஸ்கள் செயற்கை பவ­ளப்­பா­றை­யாக மாறி அதன் மூலம் கிடைக்கும் மீன்கள் நிச்­சயம் இலங்கை கடற்­ப­ரப்பில் இருந்து இந்­திய கடற்­ப­ரப்­பிற்குள் செல்லும் என்­பதால் இந்­திய மீன­வர்­க­ளுக்கும் நல்ல பயன் கிடைக்கும்.

இதற்கு முன்­னரும் விடு­த­லைப்­பு­லி­க­ளிடம் இருந்து கைப்­பற்­றிய கப்­பல்கள் மற்றும் இலங்­கையின் முன்னாள் ஜனாதிபதிகள் பயன்­ப­டுத்­திய குண்டு துளைக்­காத வாக­னங்கள் என்­பன நீர்­கொ­ழும்பு கடற்­ப­ரப்பில் நீரிழ் மூழ்கடிக்கப்பட்டுள்ளன.

ஆயினும், கைவி­டப்­பட்ட பஸ்களின் கூடுகள் எடை குறைந்­தவை என்­பதால் கடல் நீரோட்­டத்­திற்கு ஏற்ப இடத்­திற்கு இடம் நகரும். இதனால் மீன­வர்­க­ளுக்கு ஏற்­படும் நன்­மையை விட தீமையே அதிகம் என சிலர் இத்­திட்­டத்­தினை விமர்­சிக்­கின்­றனர்.

இனி நாம் எது செய்தாலும் இந்த இயற்கையை பாதிக்காததாக இருக்க வேண்டும். கடலுக்குள் வாகனங்கள் இறக்கப்படும் திட்டமும் அவ்வாறானதாக இருக்க வேண்டும் என்பதே மக்களின் விருப்பம்.

கடலில் நாம் வீசிய குப்பைகளை எல்லாம் நமக்கு கடல் திருப்பி கொடுத்த சுனாமி என்ற பேரழிவை நாம் மறந்துவிடகூடாது. பவளபாறைகள் அழிவுகளுக்கு மனித செயற்பாடுகளே காரணம். இன்று செயற்கையே தேடுகின்றோம். இனியாவது கடலையும் நம்மை போல நேசித்து கடல் வாழ் உயிரினங்களை பாதுகாத்திடுவோம். 

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான், Jaffna, Scarborough, Canada

13 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், பூந்தோட்டம்

08 Oct, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

03 Oct, 2025
மரண அறிவித்தல்

ஓட்டுமடம், Walthamstow, United Kingdom

09 Oct, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், ஜேர்மனி, Germany

06 Oct, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், Bobigny, France

27 Sep, 2025
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு, சுன்னாகம்

09 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை

10 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
நினைவஞ்சலி

கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணம், நீர்வேலி

28 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஆறுகால்மடம், பலெர்மோ, Italy, பிரித்தானியா, United Kingdom

13 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, Brampton, Canada

12 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெல்லியடி, London, United Kingdom

03 Oct, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், கனடா, Canada

11 Oct, 2009
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Frauenfeld, Switzerland, Weinfelden, Switzerland

09 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Markham, Canada

06 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US