குறை நிரப்பு நியமனங்களை வழங்க சுகாதார அமைச்சு இணக்கம்
நான்கு அம்ச கோரிக்கைகளை முன்வைத்து அரச வேலையற்ற சித்த மருத்துவ சங்கத்தினர் சுகாதார அமைச்சில் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.
குறித்த கலந்துரையாடல், நேற்றையதினம்(17.03.2025) யாழ்ப்பாணத்தில் நடாத்தப்பட்டிருந்தது.
அந்தவகையில், இந்தக் கலந்துரையாடலில் சில இணக்கப்பாடுகள் எட்டப்பட்டன.
முதற்கட்ட நியமனங்கள்
ஏற்கனவே உள்ளகப் பயிற்சியை முடித்த 1,689 ஆயுர்வேதம், சித்த மற்றும் யுனானி வேலையற்ற மருத்துவர்களுக்கு உடனடி நியமனங்களை வழங்குதல், தற்போது உள்ளகப்பயிற்சி பெற்று வரும் 374 உள்ளக மருத்துவ அலுவலர்களுக்கு அவர்களின் பயிற்சி முடிந்தவுடன் உடனடி நியமனங்களை வழங்குதல், எதிர்வரும் ஆண்டுகளில் இன்டர்ன்ஷிப் எனப்படும் உள்ளகப் பயிற்சியை முடித்தவுடனேயை உடனடி நியமனங்களை வழங்குதல், நாட்டின் மக்கள் தொகைக்கு ஏற்ப சுதேச மருத்துவர் எண்ணிக்கையையும் சமூகநல மருத்துவர் எண்ணிக்கையையும் அதிகரித்தல் போன்ற தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
அந்தவகையில், சுவசிறிபாயவில் அமைந்துள்ள சுகாதார அமைச்சில் நடைபெற்ற இக் கலந்துரையாடலில் 304 குறைநிரப்பு நியமனங்களை முதற்கட்டமாக வழங்கவுள்ளதாக சுகாதார அமைச்சினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |