வரிகளை நேரடியாக அறவிடப் போகும் நிதியமைச்சு
அரசாங்கம் உத்தேசித்துள்ள வரி விதிப்புகளை சேகரிக்கும் நடவடிக்கைகளை நிதியமைச்சின் ஊடாக மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இதனடிப்படையில், எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய பொருட்கள் மற்றும் சேவைகள் வரி (GST), பெறுமதி சேர் வரி (VAT) என்பன அதிகரிக்கப்படவுள்ளதுடன் அவை நேரடியாக நிதியமைச்சின் ஊடாக சேகரிக்கப்படவுள்ளன.
வரிகளை செலுத்தாது வரி ஏய்ப்பு செய்யும் செல்வந்தர்களிடம் இருந்து வரியை அறவிடும் நோக்கில் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இலங்கை தேசிய இறைவரி திணைக்களமே இதுவரை நாட்டில் வரி அறவிடும் நடவடிக்கைகளை கையாண்டு வந்ததது.