அமைச்சர் விஜித ஹேரத் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு விஜயம்
அமைச்சர் விஜித ஹேரத்(Vijitha Herath) கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு நேற்றையதினம் விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் விமானங்களின் தாமதம் தொடர்பில் கிடைத்துள்ள முறைப்பாடுகள் குறித்து ஆராய்வதற்காக அமைச்சர் விமான நிலையத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
சிநேகபூர்வ கலந்துரையாடல்
இதன்போது, விமான நிலையத்தின் அனைத்துப் பிரிவுகளையும் பார்வையிட்ட அமைச்சர், அந்தந்தப் பிரிவு ஊழியர்களுடன் சிநேகபூர்வமாக உரையாடியுள்ளதாகக் கூறப்படுகிறது.

24 மணி நேரமும் விமானம் தாமதம் ஏற்படுவது தொடர்பில் பயணிகளுக்கு உடனடித் தகவல்களை வழங்கவும், தாமத காலத்தில் பயணிகளுக்கு அதிகபட்ச வசதிகளை வழங்கவும் விமான நிலையம் மற்றும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸை பிரதிநிதித்துவப்படுத்தும் விசேட பிரிவு ஒன்று விமான நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜித ஹேரத் இதன்போது தெரிவித்துள்ளார்.
அதேநேரம், இந்த காலதாமதங்களை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தல் வழங்கியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
You may like this...
மேக் 5 வேகத்தில் வடிவத்தை மாறும் ஹைப்பர்சோனிக் ஏவுகணை - சாத்தியமற்றதை சாத்தியமாக்கும் சீனா News Lankasri
தரையில் தூக்கம், 20 பேருக்கு 4 கழிப்பறை: போராட்டத்தில் உருவான இந்திய மகளிர் கிரிக்கெட் News Lankasri
தமிழ் சினிமாவில் பிரியங்கா தேஷ்பாண்டே பாடியுள்ள ஒரே ஒரு பாடல், சூப்பர் ஹிட் தான்... என்ன பாடல் தெரியுமா? Cineulagam
கடிதத்தில் இருப்பவர் குறித்து சக்திக்கு கிடைத்த க்ளூ, அவரது பெயர் என்ன... எதிர்நீச்சல் தொடர்கிறது எபிசோட் Cineulagam