துப்பாக்கிச்சூட்டு சம்பவம்! - அமைச்சர் வியாழேந்திரனின் உருவ படங்கள் எரிப்பு
இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனின் பாதுகாப்பு உத்தியோகத்தரினால் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் கொல்லப்பட்டதை அடுத்து மட்டக்களப்பு பிள்ளையாரடி பகுதியிலுள்ள அவரது வீட்டிற்கு முன்பாக மக்கள் பாரிய எதிர்ப்பை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனின் உருவப் படங்களை எரித்து பிரதேச மக்கள் தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த பகுதியில் தற்போது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முன்னதாக இன்று மாலை இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் வீட்டுக்கு அருகில் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
அமைச்சரின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தின் போது டிப்பர் சாரதி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து, அப்பகுதியில் பெருமளவானோர் ஒன்றுகூடி துப்பாக்கிசூடு சம்பவத்திற்கு எதிராக கண்டனம் வெளியிட்டுள்ள நிலையில் அமைச்சர் எஸ்.வியாழேந்திரனின் உருவப் படங்களை எரித்து பிரதேச மக்கள் எரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.