வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சரின் மகள்
வடமேல் மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர் ஒருவரின் மகள் அட்டை கடித்து காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கோவிட் வைரஸ் பரவல் காரணமாக பயணங்கள் தடை செய்யப்பட்டுள்ள நிலையில் அமைச்சர் ஒருவரின் மகள், மாத்தளை ,றிவர்ஸ்டன் பிரதேசத்தில் உள்ள சுற்றுலா பங்களா ஒன்றில் வார விடுமுறையை கழிக்க சென்றிருந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சில இணையத்தள ஊடகங்கள் இந்த செய்தியை வெளியிட்டுள்ளன.
இதன்போது ,அட்டை கடிக்கு உள்ளாகி காயமடைந்த அமைச்சரின் மகளை அமைச்சரவை பாதுகாப்பு பிரிவின் அதிகாரிகள், வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.