அமைச்சின் உயர் அதிகாரிகளை பதவி விலகுமாறு அறிவித்துள்ள அமைச்சர்
Resignation
Minister
Namal Rajapaksa
johnston fernando
Highways
Announces
By Steephen
பெருந்தெருக்கள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தனது அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களின் தலைவர்கள் உட்பட பணிப்பாளர் சபை உறுப்பினர்களை பதவிகளில் இருந்து விலகுமாறு அறிவித்துள்ளதாக தெரியவருகிறது.
இதனடிப்படையில், அமைச்சின் கீழ் உள்ள மகநெகும, இயந்திர தளபாட நிறுவனம், வீதி அபிவிருத்தி அதிகார சபை, மகநெகும ஆலோசனை நிறுவனம், அதிவேக நெடுஞ்சாலை போக்குவரத்து நிறுவனம் ஆகியவற்றின் பிரதான அதிகாரிகள் பதவிகளில் இருந்து விலக உள்ளனர்.
அதேவேளை அரசாங்கத்தின் அமைச்சரவை மறுசீரமைப்பின் போது, பெருந்தெருக்கள் அமைச்சு ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிடம் இருந்து நீக்கப்பட்டு, அமைச்சர் நாமல் ராஜபக்சவின் பொறுப்பின் கீழ் கொண்டு வரப்படவுள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தன.

இலங்கை அரசியல் களம் சர்வதிகாரத்தை நோக்கி நகருகிறதா! 54 நிமிடங்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US