சீனாவில் சுரங்க விபத்தில் 10 பேர் உயிரிழப்பு: தொடரும் மீட்பு பணிகள்
மத்திய சீனாவில் உள்ள ஹெனான் மாகாணத்தில் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்ப்பட்ட விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளதுடன் 6 பேர் காணாமல் போயுள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து நேற்றைய தினம் (12.1.2023) பிற்பகல் 2.55 மணியளவில் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த விபத்து சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
மீட்கும் பணி
நிலக்கரி மற்றும் எரிவாயு வெடித்ததால் விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
விபத்து நடந்த போது மொத்தம் 425 பேர் நிலத்தடியில் வேலை செய்து கொண்டிருந்துள்ளனர்.
அவர்களில் 380 பேர் அங்கிருந்து மீட்கப்பட்ட நிலையில் எஞ்சியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |