கிளிநொச்சியில் ஏற்பட்ட மினி சூறாவளி!பாதிப்பு தொடர்பில் வெளியான தகவல்(video)
கிளிநொச்சியில் இன்று பிற்பகல் ஏற்பட்ட மினி சூறாவளி காரணமாக பாடசாலை உள்ளிட்ட பொதுச்சொத்துக்கள் மற்றும் போக்குவரத்து என்பன பாதிப்படைந்துள்ளன.
கிளிநொச்சி மகாவித்தியாலய வளாகத்தில் காணப்பட்ட மரங்கள் முறிந்து சரிந்துள்ளதுடன், பாடசாலை தற்காலிக கொட்டகைகளும் காற்றினால் தூக்கி வீசப்பட்டுள்ளது. இதனால் வகுப்பறை கற்றல் செயற்பாடுகள் பாதிப்படைந்துள்ளது.
மினி சூறாவளியால் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள்
இதேவேளை குறித்த பாடசாலைக்கு முன்னால் இருந்த முதிர்ச்சியடைந்த மரம் ஒன்றின்
கிளை முறிந்து விழுந்ததில் அவ்வீதியூடான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை முல்லைத்தீவு பரந்தன் பிரதான வீதயில் இரண்டாம் கட்டை பகுதியில் வீசிய பலத்த காற்று காரணமாக 4 கடைகளைக்கொண்ட கடைத்தொகுதி ஒன்றின் கூரைத்தகடுகள் தூக்கி வீசப்பட்டுள்ளன.
மேலும் விற்பனை பொருட்கள் மழைக்கு நனைந்துள்ளன. கால்நடைப் பண்ணை ஒன்றின் கூரைத்தகடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளது. மரக்கிளையும் முறிவடைந்துள்ளதுடன், அப்பண்ணைக்கான மின் இணைப்புக்கள் முழுமையாக பாதிப்படைந்துள்ளது.







புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri

சரிகமப Li’l Champs சீசன் 4ல் வெற்றிப்பெற்றவர்களுக்கு கிடைத்த பரிசுத் தொகை எவ்வளவு தெரியுமா? Cineulagam
