இளைஞர்,யுவதிகளுக்கு இராணுவப் பயிற்சி வழங்க வேண்டும்-அத்துரலியே ரதன தேரர்
இலங்கையில் உள்ள 18 வது முதல் 20 வயதான அனைத்து இளைஞர்,யுவதிகளுக்கும் ஆயுத தாங்கிய இராணுவப் பயிற்சி வழங்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.
நாடு தைரியமும் உறுதியும் இல்லாத நாடாக மாறியுள்ளது

நாடாளுமன்றத்தில் வரவு செலவுத்திட்டம் மீதான விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியிருந்தார். நாட்டில் இளைஞர்களுக்கு ஆளுமை இல்லை.
நாட்டில் ஒழுக்கம் சீர்கெட்டுள்ளது. இளைஞர்களுக்கு திடமும் ஆளுமையும் இல்லை. 10 அடி ஆழமான கிணற்றில் குதித்தாலும் அவர் இறந்து போவார்.
கடலில் குளிக்க முடியவில்லை. தென்னை மரத்தில் ஏற முடியவில்லை. எமது நாடு எவ்வித தைரியமும் உறுதியும் இல்லாத நாடாக மாறியுள்ளது.

பாடசாலைக்கு செல்லும் 3 லட்சத்து 50 ஆயிரம் பிள்ளைகள் இருக்கின்றனர். அவர்களுக்கும் நாம் இராணுவப் பயிற்சியை வழங்க வேண்டும்.
உரிய வயதில் பாடசாலைகளில் சேர்ப்பது போன்று 18 முதல் 20 வயதான அனைவரும் ஆயுதம் தாங்கிய இராணுவப் பயிற்சிக்கு உட்படுத்தப்பட வேண்டும் எனவும் அத்துரலியே ரதன தேரர் மேலும் தெரிவித்துள்ளார்.
உரிமைகளுக்காக மீண்டும் மீண்டும் போராடும் ஈழத்தமிழர்களின் நிலை.. 11 மணி நேரம் முன்
சரிகமப சீசன் 5 புகழ் பவித்ராவுக்கு அடித்த லக்... யாருடைய இசையமைப்பில் பாடுகிறார் தெரியுமா? Cineulagam
திட்றவனுக்கும் காசு : திட்டு வாங்குறவனுக்கும் காசு.. பிக்பாஸ் இது தான்! நாஞ்சில் விஜயன் ஓபன் டாக் Manithan
ஜனநாயகன் படத்தின் பட்ஜெட் மற்றும் பிசினஸ் ரிப்போர்ட்.. ரிலீஸுக்கு முன் இவ்வளவு கோடி லாபமா Cineulagam