இளைஞர்கள் அனைவரிற்கும் இராணுவப் பயிற்சி! தேரர் கூறும் ஆலோசனை - செய்திகளின் தொகுப்பு
இளைஞர்கள் அனைவருக்கும் இராணுவ பயிற்சி அளிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலியே ரத்தின தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், இன்று எமது தேசத்தின் ஒழுக்கம் சீர்குலைந்துவிட்டது. இன்றைய இளைஞர்களிடம் ஆளுமை இல்லை. ஒரு தேசமாக நாம் வலுவிழந்துள்ளோம்.
10 அடி தண்ணீர் உள்ள ஆற்றில் குதித்தால் நாம் இறந்துவிடுவோம். நமக்கு கடலில் குளிக்க முடியாது. தென்னை மரத்தில் ஏற முடியாது.
18 அல்லது 20 வயதிலோ அல்லது அதற்கு இடைப்பட்ட காலத்திலோ ஆயுதப்படை பயிற்சி முழு நாட்டிற்கும் வழங்கப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான மதிய நேர செய்திகளின் தொகுப்பு,