மத்திய கிழக்கு பதற்றம்: ஐக்கிய அரபு இராச்சியத்தில் வங்கி கிளைகள் தற்காலிகமாக மூடல்
மத்திய கிழக்குப் பகுதியில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே போர் தீவிரமடைந்து வரும் சூழலில், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஐக்கிய அரபு இராச்சியத்தில் (UAE) உள்ள தனது பெரும்பாலான கிளைகள் மற்றும் நிதி மையங்களை மார்ச் 14 வரை தற்காலிகமாக மூடுவதாக சிட்டி வங்கி (Citibank) அறிவித்துள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் தொடர்புடைய வளைகுடா நாடுகளின் வங்கி மற்றும் பொருளாதார நலன்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தப்போவதாக எச்சரித்ததைத் தொடர்ந்து, சர்வதேச வங்கிகள் தங்களது ஊழியர்களை வீட்டிலிருந்து பணிபுரியுமாறு அறிவுறுத்தி வருகின்றன.
மூடப்பட்டுள்ள கிளைகள்
துபாயில் உள்ள 'மால் ஆஃப் தி எமிரேட்ஸ்' கிளை தவிர மற்ற அனைத்து கிளைகளும் மூடப்பட்டுள்ளன; இவை மீண்டும் மார்ச் 16 அன்று திறக்கப்படத் திட்டமிடப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு வாரங்களாக நீடிக்கும் இந்த மோதல்களால் இதுவரை சுமார் 2000 பேர் உயிரிழந்துள்ளதோடு, உலகளாவிய எரிசக்தி சந்தை மற்றும் போக்குவரத்து பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.

சிட்டி வங்கியுடன் இணைந்து ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கியும் தனது ஊழியர்களைத் துபாய் அலுவலகங்களிலிருந்து வெளியேற அறிவுறுத்தியுள்ளது; மேலும் எச்எஸ்பிசி (HSBC) வங்கி கத்தாரில் உள்ள தனது கிளைகளை மூடியுள்ளது.
எழுந்துள்ள அச்சம்
இந்தப் போர் பதற்றம் காரணமாக, பாதுகாப்பான வணிக மையமாகக் கருதப்பட்ட துபாய் போன்ற நகரங்களில் இருந்து முதலீடுகள் வெளியேறக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
தற்போதைய சூழலில், வாடிக்கையாளர்களுக்கான வங்கிச் சேவைகள் ஒன்லைன் மூலமாகத் தடையின்றி வழங்கப்படும் என்றும், காசோலைகளைச் சரிபார்ப்பதில் மட்டும் சிறு தாமதம் ஏற்படலாம் என்றும் சிட்டி வங்கி தெரிவித்துள்ளது.
தந்தையை இழந்தேன், மனைவியை இழந்தேன்! ஈரானின் புதிய உச்சத் தலைவரின் உணர்ச்சிமிக்க முதல் உரை News Lankasri
பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி சீரியல் இயக்குநரின் அடுத்த புதிய சீரியல்.. தலைப்பு என்ன தெரியுமா? Cineulagam