மத்திய கிழக்கு பிராந்திய நிலைமைகள் குறித்து ஆராய விசேட குழு நியமனம்
மத்திய கிழக்குப் பகுதியில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழ்நிலை தொடர்பான சவால்களை எதிர்கொள்வது குறித்து ஆராயும் நோக்கில் விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கில் தற்போது ஏற்பட்டுள்ள யுத்த நிலைமை மற்றும் அதன் விளைவாக இலங்கைக்கு ஏற்படக்கூடிய சவால்களை ஆய்வு செய்து, அவற்றை சமாளிக்க அவசர நடவடிக்கைகள் எடுப்பதற்காக, இந்த அமைச்சரவை உப குழு நியமிக்கப்பட்டுள்ளது.
இந்த தீர்மானம் முன்கூட்டிய பாதுகாப்பு நடவடிக்கையாக எடுக்கப்பட்டதாகவும், அதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக் குழுவின் முக்கிய நோக்கங்கள்
• மத்திய கிழக்கில் நிலவும் போர்மூடிய சூழ்நிலையை மிக அருகில் கவனித்தல்
• இலங்கைக்கு ஏற்படக் கூடிய சாத்யமான தாக்கங்களை வகைப்படுத்துதல்
• அந்த தாக்கங்களை எதிர்கொள்ள அவசர நடவடிக்கைகளை சுட்டிக்காட்டி செயல்படுதல்
மேலும், இந்த அமைச்சரவை குழுவிற்கு உதவுவதற்காக அமைச்சுத் துறைச் செயலாளர்களைக் கொண்டு அமைந்த மற்றொரு குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது.
வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தலைமையிலான இந்தக் குழுவில் பெருந்தோட்ட மற்றும் கிராமிய அபிவிருத்தி அமம்சசர் சமந்த வித்யாரத்ன, வர்த்தகம், வாணிகம், உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க, மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர்
இ. குமார ஜயக்கொடி ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர்.

புதிய அரசியல் ஒழுங்கில் புவிசார் அரசியல் யுத்தங்கள் 23 மணி நேரம் முன்

போதைப் பொருள் பிரச்சனையில் சிக்கிய ஸ்ரீகாந்திற்கு தண்டனை கிடைத்தால் இத்தனை வருடம் ஜெயிலா? Cineulagam

பிரித்தானியாவில் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் Amazon - 40 பில்லியன் பவுண்டு முதலீடு News Lankasri

Record Breaking வியாபாரம் ஆனது ரஜினியின் கூலி படம்... யார் எத்தனை கோடிக்கு வாங்கியுள்ளார்கள் தெரியுமா? Cineulagam
