யாழில் உள நல விழிப்புணர்வு நடைபவனி
சர்வதேச உள நல தினத்தை முன்னிட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையினரால் உள நல விழிப்புணர்வு நடைபவனி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த நடைபவனி இன்று காலை 7:30 மணியளவில் நெல்லியடி மாலை சந்தையிலிருந்து ஆரம்பமாகி மந்திகை சந்தி, சிலையடி சந்தி, ஊடாக சரசாலை வீதியூடாக மந்திகை சந்தை வழியாக மீண்டும் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு சென்றது.
கலந்து கொண்டவர்கள்
இந்நடைபவனியை யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவ கலாநிதி ஆ.கேதீஸ்வரன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை பதில் மருத்துவ அத்தியட்சகர் தலமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பருத்தித்துறை நகரபிதா வின்சன் டிபோல் டக்ளஸ் போல், பருத்தித்துறை பிரதேச சபை உப தவிசாளர், பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், அதிபர்கள், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை விசேட மருத்துவ நிபுணர்கள், மருத்துவர்கள், தாதிய உத்தியோகத்தர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் நலன்விரும்பிகள் என பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.










நீண்ட இடைவேளைக்கு பிறகு விஜய் டிவி ஷோவிற்கு வந்த தொகுப்பாளினி டிடி... கலகலப்பான நிகழ்ச்சி, வீடியோ இதோ Cineulagam
