படுகொலை செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களின் 5வது ஆண்டு நினைவேந்தல் அனுஷ்டிப்பு
கொக்குவிலில் படுகொலை செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களின் 5வது ஆண்டு நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது.
2016 ஆம் ஆண்டு ஐப்பசிமாதம் 20 ஆம் திகதி கொக்குவில் குளப்பிட்டி சந்தி அருகே பொலிஸாரால் படுகொலை செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களாகிய கஜன் மற்றும் சுலக்சன் ஆகியவர்களின் ஐந்தாம் ஆண்டு நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது.
யாழ். பல்கலை மாணவர்களால் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நேற்று 20 ஆம் திகதி ஆத்மார்த்தமான முறையில் குறித்த நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது.
இதில் படுகொலை செய்யப்பட்ட மாணவர்களது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி ஈகைச்சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.