தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்கள் இருவருக்கு பிணை
கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றத்தினால் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் இரண்டு உறுப்பினர்களும் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ் தேசிய முன்னணியின் உறுப்பினர்கள் இன்றைய தினம் (07.06.2023) மாவட்ட நீதிவான நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியதையடுத்து பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அடுத்த மாதம் 14 ஆம் திகதி தவணை இடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
விளக்கமறியல்
யாழ். மருதங்கேணி பகுதியில் பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாக தெரிவித்து கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |