சம்பள பணத்தை நன்கொடையாக வழங்கும் நாடாளுமன்ற உறுப்பினர்
கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ச அடுத்த ஆறு மாத சம்பளத்தை (அனைத்து கொடுப்பனவுகள் உட்பட) கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு வழங்க தீர்மானித்துள்ளார்.
இந்த மாதம் முதல் வரும் அக்டோபர் மாதம் வரை தனது சம்பளத்தை நன்கொடையாக வழங்க முடிவு செய்துள்ளார்.

கொழும்பு ரிட்ஜ்வே லேடி சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளர்களுக்கு மருந்துகளை கொள்வனவு செய்வதற்கான ஆறு மாத சம்பளத்தை அனுப்பி வைக்குமாறு கோரி விஜயதாச ராஜபக்ச நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

நாடு எதிர்நோக்கும் நிலைமையை கருத்திற்கொண்டு இந்த நன்கொடை வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நன்கொடை குறித்து விஜயதாச ராஜபக்ச லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் ஜி.விஜேசூரியவுக்கும் அறிவித்துள்ளார்.
நள்ளிரவில் மாயமான பல்கலைக்கழக மாணவர்... நான்கு வாரங்களுக்குப்பிறகு தெரிய வந்த அதிர்ச்சி சம்பவம் News Lankasri
சரிகமப: தனியாக வந்த சிறுமிக்காக பாடகி சைந்தவி செய்த விடயம்... கண்ணீர் மல்க வைக்கும் காட்சி! Manithan
எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ள 'சிறை' திரைப்படத்தின் முதல் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு தெரியுமா? Cineulagam